ஒரு முக்கியமான ஆவணப்படம்

தமிழ் ஸ்டுடியோவின் 62வது குறும்பட வட்டம்…
நாள்: 14-03-2015, சனிக்கிழமை.
 
இடம்: இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.
 
நேரம்: மாலை 5.30 மணிக்கு.
 
திரையிடப்படும் ஆவணப்படம்: “யாதும்”
 
இயக்குனர்: கோம்பை அன்வர்.
சிறப்பு விருந்தினர்கள்:
 
ஆர்.ஆர். சீனிவாசன் (ஆவணப்பட இயக்குனர்)
D.I.அரவிந்தன் (பத்திரிக்கையாளர் “தமிழ் இந்து”)
ஹலீதா ஷமீம் (இயக்குனர் “பூவரசம் பீப்பீ”)
நிகழ்விற்கு அனைவரும், வருக! அனுமதி இலவசம்!
‘யாதும்’ இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம் ஒரு சமூகத்தின் வராற்றுத் தொன்மை என்பது அது வாழும் எல்லாக் காலத்திலும் தேவைப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு சமூகமும் தம் வரலாற்று வேர்ககள் குறித்த விசாரனையை மேற்கொள்ள வேண்டும்.ஏனனில் வரலாறு இல்லாத சமூகம் தனது தனித்துவத்தையே இழந்துவிடும்.
அந்தவகையில் தனது வரலாற்றின் வேர்களை நோக்கிய பயணத்தின் நீண்ட தூரத்தைக் கடந்து அதனை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.அன்வர்.யாதும் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் இந்திய முஸ்லிம்களது வரலாற்றுத் தொன்மையை தேடிப் பயணிக்கிறது. இந்தியாவின் தமிழ் முஸ்லிம் உறவென்பது நூற்றாண்டு களைக் கடந்தது என்று அது நிரூபிக்கிறது.
“ 50 நிமிடங்கள் ஓடும் இந்த யாதும் ஆவணத் திரைப்படம் தமிழ் மண்ணில் இஸ்லாம் வேர் கொண்ட வரலாற்றையும் இஸ்லாமியர்களின் மூதாதையர்களையும் அவர்களோடு வளர்ந்த, வளர்க்கப்பட்ட வணிகம்,கல்வி, இலக்கியம் என எல்லாக் கூறுகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.“
“தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் பயணம் செய்து தன்னுடைய தமிழ் வேர்களைத் தேடும் அன்வர் பழவேற்காட்டிலும் காயல்பட்டினத்திலும் கீழக்கரையிலும் நாகூரிலும் அவற்றைக் கண்டெடுக்கிறார்.