கூடு – நான்காவது இதழ்

கூடு நான்காவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது.

 
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய மாத இணைய இதழான கூடுவின் நான்காவது இதழ் இன்று பதிவேற்றப்பட்டுள்ளது. 15ஆம் தேதி வெளியாகவேண்டிய இதழ்தான் என்றாலும், சில நாட்கள் தாமதமாகி இன்று வெளியாகியுள்ளது. இந்த இதழில் பாவண்ணனின் அருமையான சிறுகதை ஒன்றும், தமிழ்மகனின் தமிழ் சார்ந்த சிறுகதை ஒன்றும், போகன் சங்கரின் சிறப்பான கவிதையும், யுவபுரஷ்கார் விருது பெற்ற பருக்கை நாவலின் ஆசிரியர் வீரபாண்டியனின் நேர்காணலும், நகுலனின் சுருதி மற்றும் உரையாடல் கவிதையை முன்வைத்து விக்ரமாதித்தன் நம்பி எழுதியிருக்கும் தொடரும், ரிஷான், தேசிகன் உள்ளிட்டோரின் தொடர் கட்டுரைகளும், தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறையில் அஸ்வகோஷ் பேசியதன் தொடர்ச்சியும் இந்த இதழில் வெளியாகியுள்ளது.

தவிர கூடுவின் சிறப்பான முன்னெடுப்பான கதைசொல்லி இந்த இதழில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த இதழில் எழுத்தாளர் பாரதிநாதன் மூன்று கதைகளை வாசகர்களுக்கு கூறியிருக்கிறார். நண்பர்கள் தவறாமல் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.