மீளுமா தமிழகம்?

இன்று மதியம் 2 மணிக்கு சன் நியூஸ் சேனலில் மீளுமா தமிழகம் என்ற தலைப்பில் நடந்த விவாதம் ஒளிபரப்பாகிறது.  நான் கலந்து கொண்ட மிக முக்கியமான தொலைக்காட்சி விவாதம் இது.  பொதுவாக சன் தொலைக்காட்சி எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் நிறுவனமாக இருந்து வருவதை கவனித்திருக்கலாம்.  புத்தகத் திருவிழா சமயத்திலும் எழுத்தாளர்களை அழைத்து வந்து நீண்ட நேர உரையாடல்களை ஒளிபரப்புகிறது.  இன்றைய விவாதம் மது, மது அருந்துதல், மது விலக்கு பற்றியது.  பல வர்க்கங்களைச் சேர்ந்த பலரின் கேள்விகளுக்கு அதில் நான் பதில் அளித்திருக்கிறேன்.  மதுவுக்கு மாற்று எது என்ற கேள்விக்கான என் பதிலும் அதற்கு பட்டினப்பாக்கத்தைச்  சேர்ந்த ஒரு பெண்மணி அளித்த விளக்கமும் மிக முக்கியமானது.  அந்தப் பெண்ணின் தரப்பு எனக்கு மிகவும் புதியது; நான் பெண் அல்ல என்பதால்.  கற்றேன்; கற்பித்தேன்.  இதே நிகழ்ச்சி இரவு ஒன்பது மணிக்கு மறு ஒளிபரப்பு ஆகிறது.

இன்றைய தி.நகர் நிகழ்ச்சிக்கு வர மறந்து விடாதீர்கள்.  மாலை ஐந்து மணி.  அலமேலு கல்யாண மண்டபம். அகஸ்தியர் கோவில் பின்புறம்.  இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசுகிறேன். கேள்வி பதில் பகுதியும் உண்டு.