சிம்பு, அநிருத் – 2

சிம்பு, அநிருத் இருவரின் செயலில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சினிமா ஹீரோ என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; கேட்க நாதி இல்லை என்ற அவர்கள் இருவருடைய திமிர் தான். பொதுவெளியில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனத்தை என் வாழ்நாளில் கண்டதில்லை. அயோக்கியத்தனம் செய்பவன் கொஞ்சம் ஒளிந்து கொண்டு, அடையாளம் தெரியாமல் செய்வான்.  ஆனால் இங்கே சினிமா ஹீரோ பொதுவெளியில் செய்கிறார்.   என்னுடைய மிக முக்கியமான ஆட்சேபணை எல்லாம், குழந்தைகளைப் பாழடிக்க இந்த ஆட்கள் யார்?  பள்ளிக்கூட சிறார்கள் தானே பாட்டு கேட்கிறார்கள்?  இது பற்றிய என் தொலைக்காட்சி பேட்டியை இன்று இரவு எட்டு மணிக்கு நியூஸ் செவன் தமிழ் சேனலில் காணலாம்.  இந்தப் பேட்டி மீண்டும் இன்று இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகும்.

பொதுவாக என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி நான் கவனம் கொள்வதில்லை.  ஆனால் இது அப்படியல்ல என்பதால் இங்கே எழுதியிருக்கிறேன்…