ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள சவால்கள்…

ஜெயலலிதா ஸ்டாலினுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  அவர் தானே விஜயகாந்தை திமுகவிலிருந்து விரட்டியது?  ஏஷியாநெட்டில் நான் எழுதிய மூன்றாவது கட்டுரை இது.  திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுதியது.  செல்வகுமார் காரை ஓட்டி வந்தார். அவரும் நானும் மட்டுமே போயிருந்தோம்.  ஜவ்வாது மலைக்கு அழைத்தார் வெங்கடேஷ் (செங்கம்).  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவலை முடிக்க வேண்டியிருக்கிறது என்று அந்த சொர்க்கத்தை விட்டுவிட்டுக் கிளம்பினேன்.  டீக்கடையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து எழுதி அதைக் கைபேசி மூலம் படம் எடுத்து அனுப்பினேன்.  செல்வாவிடம் மடிக் கணினி இருந்தது.  ஆனால் ஒரு டீக்கடையில் வைத்துக் காகிதத்தில் எழுதலாம்.  மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருந்தால் அந்தச் சூழலை அவமானப்படுத்துவது போல் இருக்கும்.  அதனால் நோட்டுப் புத்தகம்.  அந்தக் கட்டுரையின் இணைப்பு:

http://newsable.asianetnews.tv/election2016/jaya-charu-column