தினமலரில் அடியேனின் கட்டுரை

இன்றைய 30 ஜூன் 2016 தேதியிட்ட தினமலரில் சிந்தனைக் களம் பகுதியில் என் கட்டுரை வெளிவந்துள்ளது.  மனோபாவம் மாற வேண்டும் என்பது தலைப்பு.  “தினமலர் பார்த்தேன். அதில் சிந்தனை களம் என்ற ஒரு பக்கமே இல்லியே” என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் வாசகிகளுக்கு ஒரு விளக்கம்.  சிந்தனைக் களம் பகுதி இன்றைய தினமலரின் 12-ஆம் பக்கத்தில் வந்துள்ளது.  என்னுடைய தீவிர வாசகர்கள் நாப்பத்திரெண்டு பேரும் இன்றிலிருந்து தினமும் தினமலர் வாங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  காரணம், இனிமேல் தினமலரில் அடிக்கடி எழுதுவேன்.