நாடோடியின் நாட்குறிப்புகள் – 31

ஒருநாள் நல்ல மழை. அவ்வளவு கூட்டமில்லை. முன்வரிசை (மூன்று ரூபாய்) காலியாக இருக்கிறது. மேடையில் பிஸ்மில்லா கான். பின்னால் இருப்பவர்களை முன்னால் வந்து அமரச் சொன்னார். எல்லோரும் வந்து அமர்ந்தோம். எனக்கும் இன்னும் சிலருக்கும் இடமில்லை. மேடையில் வந்து தனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தோம். கடவுள் கூப்பிடுகிறார். மறுக்கலாமா? ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா?” என்று பக்கத்திலிருந்து குரல் கேட்டது. பார்த்தால் பிஸ்மில்லா கான். அப்படியே உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். நஹி நஹி நஹி என்று சொல்லி அணைத்துக் கொண்டார். இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.

மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/19/1497810605