பழுப்பு நிறப் பக்கங்கள் தினமணி இணைய இதழில் தொடராக வந்து கொண்டிருந்த போது அது பற்றி எழுத்து காலத்து மூத்த கவிஞர் எஸ். வைதீஸ்வரன் அது பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புள்ள சாரு…
இந்த வாரம் தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். கு.ப.ரா.வைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் அதீத உறவுகளைப் பற்றி எழுதும் சிறுகதை ஆசிரியரைப் போல் ஒரு பிம்பத்தை யாரோ தவறாக ஆவணப்படுத்திவிட்டார்கள். இலக்கியம் பற்றிய விசாலமான பார்வையும் படிப்பும் சிந்தனையும் கொண்ட ஒரு பிரக்ஞையுள்ள கலைஞனை உங்கள் கட்டுரை மூலம் கண்டறிகிறேன்.
இத்தகைய தகவல்கள் மிக அடிப்படையாக ஒரு இலக்கிய வாசகனுக்கும் பின்வரும் தலைமுறைகளுக்கும் உபயோகப்படும். ஒரு கவிஞனின் ஏதாவது ஒரு கவிதை அம்சத்தை மட்டும் ‘மேய்ந்துவிட்டு’ அவனுக்கு அதையே ஓர் அடையாள முத்திரையாக செய்துவிடுகிற அசிரத்தையான மதிப்பீடுகள் இன்றும் நேருகின்றன. கு.ப.ரா அன்றே இதை ஊகித்து சுட்டிக் காட்டியிருக்கிறார். உங்கள் ஊக்கமான இந்த இலக்கியப் பணி தொடரட்டும்.
அன்புடன்,
எஸ். வைதீஸ்வரன்.
27.6.2016.
for pre-order,