நிகழ்காலத் தமிழ் சினிமா – சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல்

PURE CINEMA -123-09-2018, ஞாயிறு,  மாலை 5 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.
நண்பர்களே, புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமா புத்தக அங்காடியில் முதல் கலந்துரையாடல் நிகழ்வாக சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நிகழ்கால தமிழ் சினிமா எனும் தலைப்பில் இந்த கலந்துரையாடலில் தமிழில் தற்போது வெளியாகும் திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் போக்கு, புதிய இயக்குனர்களின் வருகை, புதிய திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம், சினிமா ரசனையை அவை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்து சாரு நிவேதிதா பேச இருக்கிறார். அடுத்த வாரம் முதல் சாரு நிவேதிதா தொடர் பயிற்சி ஒன்றினை நடத்த இருக்கிறார். அதற்கான அறிவிப்பும் ஞாயிறு கலந்துரையாடலில் வெளியாக இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட பியூர் சினிமாவின் அரங்கு அதிகபட்சம் ஐம்பது நண்பர்களே அமர்ந்து கலந்துரையாடலில் பங்கேற்கலாம். முன்னர் போல எவ்வளவு நண்பர்கள் வந்தாலும் உள்ளே அனுமதிக்க புதிய அரங்கில் வசதியில்லை. எனவே சரியாக 5 மணிக்குள் வரும் 50 நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்னரே வந்து புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமாவின் புதிய அம்சங்களை நண்பர்கள் பார்க்கலாம். புத்தகங்கள் வாங்கலாம். நண்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். அவசியம் வந்துவிடுங்கள்.