வைரமுத்து பற்றி அராத்து

மீடூ என்பது ஆண்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி செக்ஸுவலாக அத்துமீறுவது என்று பார்த்தோம். தமிழகத்தில் இது வைரமுத்து – சின்மயி என்று முன்வைக்கப்பட்டு பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. மீடூவுக்கு ஆதரவாக பேசினாலோ , வைரமுத்துவை எதிர்த்துப் பேசினாலோ , சின்மயி ஆள் என்று முத்திரை. வைரமுத்துவை ஆதரித்துப் பேசினால் திராவிட இன உணர்வாளன் என்று அடையாளம். திராவிட இயக்கங்கள்தான் இந்த மீடூவை ஆதரித்து இருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால் ஏனோ இந்த விஷயத்தில் தலைகீழாக அப்படி ஒரு முரண். இந்த மீடூ இயக்கத்தை நான் தமிழகத்தில் வைரமுத்து – சின்மயி விவகாரமாகப் பார்க்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் , சின்மயி சொல்வது முழுக்கப் பொய் என்று வைத்துக்கொண்டாலும் , நான் வைரமுத்துவுக்கு எதிராகவே எழுதுவேன். ஏனென்றால் , வைரமுத்துவை எதிர்த்து பல பெண்கள் குற்றச் சாட்டுக்கள் வைத்திருக்கிறார்கள். சின்மயி முதன்மைப் படுத்தப்படுவதால் மற்ற பெண்களின் குற்றச்சாட்டுக்கள் தெரியாமலேயே போய் விடுகின்றன. அல்லது தந்திரமாக அவைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். இந்த விஷயத்தில் சின்மயி முதன்முதலாகக் குற்றச் சாட்டு வைத்தார் என்பதைத் தாண்டி இதில் சின்மயித் தன்மை வேறெதுவும் இல்லை. இனி நான் எழுதப்போவது வைரமுத்துவின் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களைப் பற்றித்தானே அன்றி சின்மயி பற்றி அல்ல , வைரமுத்து – சின்மயி என்ற வகையிலும் அல்ல. வேறு சில பெண்கள் வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளனர்.அதையெல்லாம் படித்து இருக்கிறீர்களா ? இல்லை படிக்காத மாதிரி நடிக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஒரு பெண் , 18 வயது . வாய்ப்பு கொடுக்கிறேன் பேர்விழி என்று அழைத்திருக்கிறார். அப்போது ஐயாவுக்கு 57 – 60 வயது இருக்கலாம். எனக்கு தாத்தா மாதிரி என்கிறார் அந்த சின்னப் பெண். கவனியுங்கள் , அப்பா மாதிரி கூட அல்ல. அந்தப் பெண் அறையில் நுழைந்ததும் அவளை அணைத்து , முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண் தட்டி விட்டு விட்டு ஓடி வந்து விடுகிறாள். அந்தப் பெண் இப்படி நடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டாள். அதாவது 1 சதவீதம் கூட இதற்கான சாத்தியக்கூறை அவள் மனம் சிந்தித்து இருக்காது.

நீங்கள் திருப்பதி மலை ஏறிக்கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு காண்டா மிருகம் உங்கள் மீது பாய்ந்தால் எப்படி இருக்கும்? இப்படி பயமே இல்லாமல் நடந்து கொள்ள அவருக்கு எப்படி தைரியம் வந்தது ? தன்னை எதிர்த்து யாரும் ஏதும் செய்ய முடியாது என்ற திமிர் எப்படி வருகிறது ? தனக்கிருக்கும் அரசியல் , பெரிய இடத்து தொடர்புகள். சினிமாத் தொடர்புகள் மற்றும் மீடியா தொடர்புகள். கவனித்துப் பாருங்கள்,ஐயா மீது குற்றச்சாட்டுகள் வைக்க வைக்க ஐயா நினைத்தது போலவே நடந்தது. ஸ்டாலின் , வைகோ , திருமா என ஐயாவே பட்டியல் இட்டு , இவர்கள் உடனிருக்க பயமெதற்கு என்கிறார். இவர்கள் எல்லாம் ஐயாவுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறார்கள்.சின்மயிக்கு மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு , காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் என்று. எந்த மீடியாவாவது அவரிடம் இதைப்பற்றி கேள்வி கேட்டதா ? இரண்டு பக்கங்களுக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ் இந்து , ஐயா இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பக்க விளக்கங்கள் என்ன என்றாவது கேட்டதா ?மீடூ பற்றி மட்டும் கேள்விகள் வேண்டாம் என்று ஐயா சொல்லிவிட்டாராம். அதை மீட்யாக்கள் வேத வாக்காக எடுத்துக்கொண்டன.இப்போது தெரிகிறதா ஐயாவின் பரந்து பட்ட அதிகாரம். அவர் திட்டமிட்டு கட்டமைத்துக்கொண்ட அதிகாரம் ?

அமைச்சர் ஜெயகுமார் பேசுவது போல வெளிவந்த ஆடியோவை வைத்து எல்லோரும் அவரை எப்படி சவட்டி எடுத்தனர்? மீடியா எப்படி ருத்ர தாண்டவம் ஆடியது ? கமல் கூட ஜெயகுமாரை மறைமுகமாகக் கிண்டல் அடித்து ட்வீட் போட்டார். ஐயா விஷயத்தில் ரஜினி , கமல் , ஷங்கர் , மணிரத்னம் உட்பட பெரிய தலைகள் எல்லாம் பேரமைதி காத்தன. ஏனென்றால் , ஜெயமோகன் சமீபத்தில் எழுதி இருக்கும் கட்டுரையில் சொன்னது போல , ஐயா எல்லோரிடமும் தனிப்பட்ட முறையில் உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ். ஜாதி ரீதியாக என்னை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றார் ஐயா. தமிழன் என்றார். ஐயா தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஜாதியா ? ஆண்ட ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்தானே ? ஜாதிய பெருமைகள் சுமந்து கொண்டு திரிபவர்தானே? மீனவர் சமுதாய ஜெயக்குமாரை போட்டு அடித்தார்களே , அவர் உங்களை விட உயர்ந்த ஜாதியா ? அவர் தமிழன் அல்லாமல் மலையாளியா ? தெலுங்கனா ? ஒரு மூத்த அமைச்சரைத் தாண்டிய அதிகாரம் எங்கிருந்து வருகிறது ?அதற்கும் ஜெயமோகன் விடை அளிக்கிறார். வைரமுத்து கலைஞருக்கும் நண்பர் , மோடி புகழும் பாடுவார். ரஜினிக்கும் , கமலுக்கும் நண்பர். ஜெய்மோகன் வார்த்தைகளில் சொவதென்றால் ,”இன்று மு.க.ஸ்டாலினுக்கும், முத்தரசனுக்கும், இல.கணேசனுக்கும், வானதி ஸ்ரீனிவாசனுக்கும், வெங்கையா நாயிடுவுக்கும் வேண்டியவர். அந்த தொடர்புகளைப் பேணும் கலை அறிந்தவர்.”இது அல்லாமல் தான் இளம் ஃபிகர்கள் என நினைக்கும் இளம் பெண்களின் மீது பாய ஏ.ஆர் . ரஹ்மானிடம் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்ற கண்ணியையும் பயன்படுத்துவார். இளம் ஃபிகர்கள் என்று ஏன் தலைப்பு வைத்தேன் என்றால் , ஐயா மத்திம வயதுப் பெண்கள் மீதோ , தன் வயதொத்த பெண்கள் மீதோ பாய்வதில்லை. ஃபிலிர்ட் செய்வதில்லை. எல்லாம் 18 – 25 வயது இளம் நங்கைகள்தான்.

இதை இன்னொரு விதமாகப் பார்க்கலாம். ஐயாவுக்கு ஒரு வீக்நெஸ் . எந்த இளம் பெண்ணாக இருந்தாலும் குரங்கு லபக்கென்று பாய்ந்து தலையில் அமர்ந்து பேன் பார்ப்பது போல் , ஐயாவும் லபக்கென்று பாய்ந்து அதரங்களை சுவைக்க முற்படுவார். ஒருவேளை , ஐயாவுக்கு இது ஒரு மனநோயா ?. அப்படி வைத்துக்கொண்டால் , அல்லது உண்மையாக இருந்தால் இது பிரச்சனையே இல்லை. ஐயாவுக்கு கவுன்ஸிலிங்க் கொடுத்தோ , மனநல மருத்துவமனையில் சேர்த்தோ ஜோலியை முடித்துக்கொள்ளலாம். ஆனால் விஷயம் அப்படி அல்ல. “திரைச்சூழலில் அவர் பொதுவாக ஒரு கனவானுக்குரிய ஆளுமை கொண்டவர்” என்று ஜெயமோகன் சொல்கிறார். மேலும் “திரையுலகில் ரஜினியோ கமலோ பிறரோ முப்பதாண்டுகளாக அவர்மேல் கொண்டிருக்கும் நன்மதிப்புக்கு இதுவே காரணம்.”என்றும் சொல்கிறார்.இதற்கு என்ன அர்த்தம் என்றால் திரைச்சூழலில் ஐயா வாலாட்டுவது இல்லை. இன்னும் தெளிவாக புரிய வேண்டும் என்பதற்காகச் சொல்ல வேண்டும் என்றால் , திரிஷா , நயன் தாரா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களிடம் ஐயா பாய்வதில்லை. சற்றே நிமிர்ந்து பார்த்து தலைசுற்றிப் போவதோடு சரி. ஏனென்றால் அவர்களிடமெல்லாம் அதிகாரம் இருக்கிறது.அறுத்து விடுவார்கள். ரஜினி கமல் கொண்டிருக்கும் நன்மதிப்பிற்கும் இதுவே காரணம். அவர்கள் சார்ந்த பெண்களிடம் ஏதும் வைத்துக்கொள்வதில்லை. இதையே அரசியல் கட்சித் தலைவர்களிடமும்,அவர்கள் சார்ந்த இளம் பெண்களிடமும் கடைபிடித்து கவனமாக இருப்பார்.

இதைத்தான் தந்திரம் என்கிறேன். அதனால் இது மனநோய் அல்ல. ஐயா விளையாட்டுக் காட்டுவது எல்லாம் அதிகாரம் இல்லாத அபலைகளிடம் தான். அதனால்தான் மீடூ இயக்கம் சொல்லும் , பொருத்தமான ப்ரிடேட்டராக ஐயா ஒரு க்ளாஸிக் ,விண்டேஜ் குறியீடாக மாறுகிறார். பல பெண்கள் தங்களுக்கு ஐயா செய்த கைங்கர்யங்களை விரிவாக வெளிப்படையாக பொது வெளியில் கூறி இருக்கிறார்கள். அதெல்லாம் இணையத்திலும் கிடைக்கின்றன. வெளியே சொல்ல முடியாதவர்கள் எத்தனையோ? சின்மயி பொய் சொல்கிறார் என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் , மற்ற எல்லா பெண்களும் ஏன் பொய் புளுக வேண்டும்? அதில் பெரும்பாலான பெண்கள் பொதுத்தளத்தில் அறிமுகமில்லாதவர்கள். ஏ. ஆர். ரஹ்மான் சகோதரி கொடுத்த பேட்டியையும் பார்க்க வேண்டுகிறேன்.

ஐயா அத்துமீறியதைத் தொடர்ந்து ஒரு பெண் வெளியே ஓடி வருகிறாள். அவள் அதை இப்படிச் சொல்கிறாள் – “ நான் ஹாலில் ஓடி வந்தேன். அதை அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். நான் “ஓக்கே சார் , சீ யூ லேட்டர் சார் “ என்று சொல்லிவிட்டு ஓடி வந்தேன் என்கிறார். இங்குதான் நீங்கள் எதிர்பாராமல் அடிபட்ட ஒரு பெண்ணின் மனதையும் , எதிர்பாராத அதிகாரம் மிக்க ஆள் , மரியாதை உள்ள ஆள் அத்து மீறும் போது அவள் மூளை செயலிழந்து பேனிக் ஆவதையும் புரிந்து கொள்ள வேண்டும். திரையுலகில் பெண்கள் மீது செலுத்தப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கும் ஐயாவின் பாணிக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திரைத்துறையில் , ஓப்பனாகக் கேட்பார்கள் ,சிக்னல் கொடுப்பார்கள் , தூது அனுப்புவார்கள் இன்னும் பல்வேறு வழிகளில் மடக்குவார்கள். ஆனால் , அறைக்குள் வந்ததுமே ஐயா போல யாரும் கவித்துவமாகப் பாய்வதில்லை. அதனால் தான் ஏகப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் இருந்தாலும் ஐயா மட்டுமே தனித்துவமான மீடூ நாயகனாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார்.

சமீபத்தில் ஐயாவுக்கு சப்பை கட்டு கட்டும் விதமாக நெரூதாவை எல்லாம் மந்திரம் போட்டு எழுப்பிக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். நெரூதாவும் , நான் சினிமாவுக்கு பாடல் ஏதும் எழுதலையேப்பா என்று மன்றாடிப் பார்த்திருப்பார். நெரூதா இலங்கையில் , இருந்தபோது பணிப்பெண்ணை தூக்கிக்கொண்டு போய் மேட்டர் செய்ததை இங்கே நினைவு கூர்ந்தார்கள். அந்தப் பணிப்பெண் சொல்லி விஷயம் வெளியே வரவில்லை. நெரூதாவே எழுதித்தான் விஷயம் வெளியே வந்தது. அப்படியே இருந்தாலும் நெரூதா செய்ததால் , இனி கவிஞர்கள் , கவிஞர் என்று சொல்லிக்கொள்ளும் பாடலாசிரியர்கள் எல்லோருக்கும் எந்த இளம் ஃபிகர்கள் மேலே எப்போது வேண்டுமானாலும் பாயுங்கள் என்று லைசென்ஸ் கொடுத்து விட வேண்டுமா ? என்ன பேத்தல் இது ? இவருடைய முன்னோர் கண்ணதாசன் , வாலி எப்படி இருந்தார்கள் ? தாங்கள் எப்படி இருக்கிறோமோ அதை மறைக்க வில்லை. மதுவாக இருக்கட்டும் , மாதுவாக இருக்கட்டும். பெண்கள் சகவாசம் கூட எப்படி ? விலைமகளிர் , அல்லது விருப்பமுள்ள மகளிர். வாலி இதைப்பற்றி ஆனந்த விகடனில் தொடர் எழுதும் போது விளக்கி எழுதியுள்ளார். இவர்கள் யாரும் வாய்ப்பு கொடுக்கிறேன் வா என்று அழைத்து பாய்ந்து பிராண்டியதில்லை.

சில கலைஞர்கள் கிறுக்காக இருந்திருக்கிறார்கள். வான்கா காதை அறுத்துக்கொண்டான். வில்லியம் பர்ரோஸ் தன் மனைவியின் தலையில் கோப்பையை வைத்து சுடும்போது மனைவி மீது குண்டு பட்டு இறந்து விட்டாள். ரைட்டரா ? அப்ப மர்டரா இருக்காது , எதோ ஆக்ஸ்டண்ட் ஆ இருக்கும் என்று அப்போதைய சமூகம் நினைத்ததாம். அவரையும் ரிலீஸ் செய்து விட்டார்கள் என்று வையுங்கள். இந்தச் சம்பவம் நடந்த போது இருவருக்கும் போதை. உடனே எழுத்தாளன் எல்லாம் தன் பொண்டாட்டி தலைமீது கிளாஸை வைத்து சுடலாம் என்று லைஸென்ஸ் கொடுத்து விடலாமா ? கலைஞர்கள் கிறுக்குகளாக இருந்திருக்கிறார்கள். காரியக் கிறுக்காக இருந்ததில்லை. பெரும்பாலும் காரியக் கிறுக்காக இருப்பவன் , கலைஞனாக இருப்பதில்லை.

இந்த மீடூ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் போலியாகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. எந்த சட்டம் தான் தவறாக உபயோகப்படுத்தப்படுவதில்லை ? தேசியப் பாதுகாப்புச் சட்டம் முதற்கொண்டு , வரதட்சணை சட்டம் , கஞ்சா கேஸ் வரை நிறைய தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் எழாத குரல்கள் இதில் ஏன் இவ்வளவு இரைச்சலாகக் கத்துகின்றன ? எந்த கொலைகாரன் , திருடன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்வான் ? இந்த மீடூ புகாரிலும் எல்லாரும் பொய்க் குற்றச்சாட்டு என்றே சொல்வார்கள். இந்த கட்டுரையில் வைரமுத்துவின் குற்றங்களையும் , அவரின் அதிகாரங்களையும் முக்கியமாக எழுதி இருக்கிறேன். ஆனால் நாம் இந்த மீடூ விவகாரத்தை வைரமுத்து – சின்மயி என்ற வட்டத்துக்குள் இருந்து வெளியே எடுத்துக்கொண்டு வர வேண்டும். இதை பொதுவான பிரச்சனையாக அணுக வேண்டும்.

வைரமுத்துவின் பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் அவரிடமே இருக்கின்றன. 60 வயது ஆனாலே அடங்கிக் கிடக்க வேண்டும் என்று ஒழுக்க விதிமுறைகளை போதிப்பவன் அல்ல நான். இப்போது அவருக்கு 67 வயது ஆகிறது. இப்போது கூட ஒரு 21 வயதுப் பெண்ணின் விருப்பத்துடன் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்பதுதான் என் கருத்து. இதுவரை புகார் சொன்ன இளம் பெண்கள் யாரும் அவர் மீது வன்புணர்வு புகார்கள் சொல்லவில்லை. ஐயா வுக்கு வயது ஆனதன் காரணமாக தொடுதல் , தடவுதல் , முத்தமிடுதல் , அறைக்கு அழைத்தல் , செக்ஸியாக பேசுதல் என்பதோடு நின்றிருக்கலாம். 20 வருடங்களுக்கு முன்பு என்னவெல்லாம் நடத்தினாரோ , தெரியவில்லை. அந்தப் பெண்களுக்கு இப்போது 40 முதல் 50 வயது ஆகி இருக்கலாம். வெளியே சொல்ல கூச்சமாகவும் பயமாகவும் இருக்கலாம். உடலும் மனமும் ஒத்துழைக்கும் வரை இருதரப்பு சம்மதத்தோடு செக்ஸில் நன்கு ஈடுபட்டு அனுபவித்து விட்டு , ஒத்துழைக்காத காலம் வருகையில் , அதிலிருந்து விடுபட்டு விட வேண்டும். பர்வர்ஷன் நோக்கி போக அனுமதிக்கக் கூடாது. ஐயா அவர்கள் உடலும் மனமும் ஒத்துழைக்காத இந்த காலத்தில் அந்த கட்டத்தில்தான் இருக்கிறார். அதற்கும் வழி இருக்கிறது. வடக்கத்திக் கிழவர்கள் 90 வயது ஆனாலும் இளம் பெண்களுக்கு அதிகமாகப் பணம் கொடுத்து நிர்வாணமாக நடனம் ஆடச் சொல்லி ரசிப்பார்கள். அதிகப் பட்சம் அவயங்களைத் தொட்டுப் பார்த்துக்கொள்வார்கள். அதே போல ஐயாவும் பணம் கொடுத்தால் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் சொல்லி , சம்மதம் பெற்று அழைத்து வர வேண்டும். தோ பாரும்மா , ரூமுக்குள்ள போனதும் , ஐயா பாய்ஞ்சி கட்டிப்பிடிச்சி லிப் கிஸ் அடிக்க டிரை பண்ணுவாரு. நீ வேணாம் வேணாம்னு கத்திகிட்டு ஓடிடணும். அதுக்கு 20,000 ரூபாய் என்று பேசி வைத்துக்கொள்ள வேண்டும். அது இல்லாமல் பணம் கொடுத்து அழைத்து வந்து தடவிப் பார்த்தும் அனுப்பலாம். அதற்கு ஐயாவின் ஆண் மன ஈகோ அனுமதிக்காது. இல்லை , பழங்கால தோழிகள் இருந்தால் அழைத்து தொட்டுத் தொட்டுப் பேசிக்கொண்டு இருக்கலாம். அதிலும் ஐயாவுக்கு நாட்டம் இல்லை போல. அட , யுத்தம் செய் பட பாணியில் “ஷோ” பார்க்கலாம். அதற்கு இங்கு வசதி கிடையாது. அதனால் தான் ஐயா சின்னப் பெண்களிடம் பாய்கிறார். அவர்கள் தெறித்து ஓடுவது கூட அவருக்கு திருப்தயாகவே இருக்கும் என்று கணிக்கிறேன். அதுதான் அவர் ஆழ்மனம் விரும்பியதாகவும் இருக்கலாம்.

இவ்வளவு படித்தும் மீடூவை புரிந்து கொள்ளாமல் கிண்டல் அடிக்கும் ஆண்களுக்குச் சொல்கிறேன். வைரமுத்து போல 67 வயதான ஏதேனும் பெண் திரைப் பிரபலத்தை நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு 18 வயதுப் பையன் வாய்ப்புக் கேட்டுப் போகிறேன். அந்த 67 வயது பாட்டி , வெடுக்கென்று எழுந்து லபக்கென்று கட்டிப்பிடித்து லிப் கிஸ் அடிக்கிறது என்று வையுங்கள். பாட்டி அந்த இளைஞனின் கொட்டையைக் கசக்குகிறது என்று வைத்துக்கொண்டால் அந்த இளைஞனுக்கு எப்படி இருக்கும் ?“யேய் ச்சீ கெழவி , தேவடியா , குச்சிக்காரி , என்று திட்டிவிட்டு , அந்தக் கிழவியைத் தள்ளி விட்டு மிதித்து விட்டு அவள் முகத்தில் எச்சில் உமிழ்ந்து விட்டு ஓடி வந்து விடுவான் இல்லையா ?”அது போல இந்த இளம் பெண்களால் ஐயாவிடம் செய்ய முடியவில்லை. அதுதான் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.