க.நா.சு. உரை: 26 ஜூலை


உரை கேட்க வந்து விட்டு ஏற்கனவே நூறு பேர் வந்து இடம் பிடித்து விட்டதால் இடம் இன்றித் திரும்புகின்றவர்கள் சுமார் நூறு பேர் இருக்கும். அதைத் தவிர்க்க நூறுக்கு மேற்பட்டவர்களை இணைக்கும் வசதியைப் பெற முயன்றோம். 20 டாலர் தானே என்று பார்த்தால் 20 டாலரை அழுத்தி உள்ளே போனால் 200 டாலர் என்கிறான். இந்தியர்களிடமிருந்து அமெரிக்கர்களும் கற்றுக் கொள்கிறார்கள் போல. அதனால் பழையபடியே நூறு பேர்தான் பங்கேற்க இயலும். ஆனால் பங்கேற்க இயலாதவர்கள் எனக்கு எழுதினால் என் உரையின் இணைப்பை அனுப்ப முடியும். நீங்கள் வசதி போல் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்தத் திட்டம் யாருக்கும் பிடிக்கவில்லை போல் தெரிகிறது. ஏதாவது அதற்கு ஒரு கட்டணத் தொகையை எனக்கு அனுப்பினால் லிங்க் அனுப்புகிறேன் என்றேன். 20 பேர் அனுப்பினார்கள். பரவாயில்லை. அந்த அளவு முனைப்பு இருந்தால் போதும். இப்போதும் அதையே பின்பற்றுவோம். இணைய முடியாதவர்கள் மறுநாள் எனக்கு எழுதினால் லிங்க் அனுப்ப முடியும். நீங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். கட்டணம் என்பது நன்கொடை. அது உங்களால் எவ்வளவு முடியும் என்பதைப் பொறுத்தது. அவ்வளவுதான். வரும் 26-ஆம் தேதி காலை ஆறு மணிக்கு சந்திப்போம். இந்திய நேரம். சந்திப்புக்கு வந்தவர்களும் உரையை மீண்டும் கேட்க விரும்பினால் எனக்கு எழுதுங்கள். லிங்க் அனுப்புகிறேன்.

Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Session with Charu – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்
Time: Jul 26, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://zoom.us/j/9205225069?pwd=SHhzUTVwNlNyc3crbjl5TGsvc1VYdz09

Meeting ID: 920 522 5069
Passcode: 7Xed4N
வழக்கமான நடைமுறைகள் தான்:
1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சதீஷ்வரனும் நானும் மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
3. முதல் இரண்டு மணி நேரம் என் உரை முடிந்தவுடன், கேள்வி கேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்