இஞ்சி, சுக்கு, கடுக்காய்…

இதுவரை ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நான் கொடுத்துள்ள புதிய புத்தகங்கள்:

மயானக் கொள்ளை – நாடகம்

மாயமோகினி – கவிதைத் தொகுதி

லத்தீன் அமெரிக்க சினிமா

முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்)

இப்போது கொடுக்கப் போகும் புதிய புத்தகம்: இஞ்சி, சுக்கு, கடுக்காய்.  ஆகஸ்ட் 2012 முதல் ஆகஸ்ட் 2013 வரை எழுதிய கட்டுரைகள்.  அதில் ஒரு கட்டுரை கனடாவில் வசிக்கும் என் சிநேகிதி சந்த்ரா ஸித்தன் பற்றியது.  சந்த்ராவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது ஒரு ஆச்சரியம்.  அமெரிக்காவில் ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பு நன்கு வினியோகிக்கப்பட்டது.  அதன் காரணமாக, சந்த்ரா அதைப் படித்திருக்கிறார்.  அப்போது ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்துக்காக அவர் ப்ரதீப் செபாஸ்டியனோடு இணைந்து 50 Writers, 50 Books – The Best of Indian Fiction என்ற நூலைத் தொகுத்துக் கொண்டிருந்த கால கட்டம்.  ஒருநாள் சந்த்ரா என்பவர் எனக்கு போன் செய்தார்.  சந்திக்க முடியுமா என்று கேட்டார்.  அதற்கு முன் அவரை எனக்குத் தெரியாது.  அந்தச் சந்திப்பு பற்றி சந்த்ரா மேற்படி தொகுப்பில் ஸீரோ டிகிரி பற்றிய கட்டுரையில் எழுதியிருப்பது இது:

Talking of the gendering of authors, when I went to meet Charu Nivedita I was expecting a woman I’d want to snuggle close to, a shoulder to put my head on, a soul sister. The book had just exploded upon my consciousness like an incendiary love letter that had changed everything. I was so excited! But he was a man. I forgave him, though. We whispered of Bataille, Acker, Cixous. He showed me his scar from the rape of the surgeon’s knife… and I remembered the book itself, a hardening shell of an oozing wound constantly threatening to crack…and we melted into a pool of love.

முடிந்தால் ஹார்ப்பர் காலின்ஸின் 50 Writers, 50 Books – The Best of Indian Fiction நூலை வாங்கிப் படியுங்கள்.  ஸீரோ டிகிரி பற்றி சந்த்ரா ஸித்தன் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு: Dick wants (to be) Cunt.  (அராத்து எழுதுவது போல் இருக்கிறது இல்லையா?)

என் நண்பர் ஸ்ரீராம்தான் இந்த ஐந்து நூல்களையும் தொகுத்துக் கொடுத்தது. என்னால் ஒரு நூலைக் கூடத் தொகுத்திருக்க முடியாது. அவர் எனக்கு மிகப் பெரிய பலம், கொடுப்பினை. என் எழுத்து இயக்கத்துக்கு இவரும் இவரைப் போல் இன்னும் பதினைந்து நண்பர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இல்லையேல் என் நிலைமையை நினைத்தே பார்க்க முடியவில்லை.