லும்பன் சூழ் உலகு: அராத்து

பீஸ்ட் பற்றிய பதிவில் லும்பன் என ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தேன். ஜகன் வெங்கடேஷ் என்ற நண்பர் ஒரு கமெண்ட் இட்டு இருந்தார். அவர் கமெண்ட் :- அது லும்பன் இல்லை “லம்பென்”lumpenproletariat – மார்க்சிய சிந்தனையில் மிகவும் இழிவான சொற்களில் ஒன்றாகும். மீதி கூகுள் …இந்த தமிழ் எழுத்தாளர்களால் (அதாவது தமிழ்ல எழுதறவங்க இலக்கியவாதியில்லை )நாம படற கஷ்டம் இருக்கே ஊபருக்கு பதிலா உபேர்னு கத்துகொடுப்பாய்ங்க..நாம அசிங்கப்பட்டு கஷ்டப்பட்டு அவமானப்பட்டு அத மாத்திக்கனும்அய்யா அந்த audio … Read more

தாசியின் வீடு

கேள்விகள் என்னைத் திக்பிரமை கொள்ளச் செய்கின்றன கேள்விகள் என்னைத் திணற  அடிக்கின்றன கேள்விகள் என்னை மூச்சு முட்ட வைக்கின்றன கேள்விகள் என்னை அச்சுறுத்துகின்றன காரணமென்னவென்று அந்தப் பக்கமாக  வந்த ஒரு அணுக்க தெய்வத்திடம் கேட்டேன் கேள்விகளின் கதவுகள் மூடியிருக்கின்றன உன்னுடைய உண்மை கேள்விகளின் கோட்டைக் கதவுகளைத்  திறக்க முடியாமல் வலுவற்று வீழும்போது திக்கித் திணறி ஒரு பொய்யைச் சொல்கிறாய் அவ்விதமாகத்தான் சிருஷ்டித்திருக்கிறான் படைத்தவன் விசனப்படாதே சிருஷ்டியை உன் தர்க்கம் கொண்டு புரிந்து கொள்வது கடினம்  என்றபடியே பக்கத்திலிருந்த … Read more

எத்தனை நாள் கிடந்த வாழ்வு

கவிதை என்னைத் தேடி வரவில்லை நானும்  தேடிப் போகவில்லை ஆனாலும் எப்படியோ சந்தித்துக் கொண்டோம் தாமதம்தான் சற்றுமுன் நடந்திருக்கலாம் எல்லாமே கொஞ்சம் முன்னால் நடந்திருக்கலாம்தான் உன் காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே வந்தேன் என்றது கவிதை என்ன காயமோ என்ன மருந்தோ பசித்த ஒரு நாயின் அழுகுரல் என் அமைதியைத் துளைக்க இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன் ஒரு துணுக்கைக் கூட விடாமல் விழுங்கியது நாய் எத்தனை நாள்  நொந்த பசி எத்தனை … Read more

சொற்கடிகை : 26. நண்டுக் குழம்பு

சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது.  அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான்.  நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம்.  எல்லாவற்றிலுமே அப்படித்தான்.  உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும்.  மற்றபடி எல்லாம் குழம்புதான்.  கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த … Read more

இன்றைய கவிதை: கனவில் வந்த பிள்ளையார் எறும்பு

சொன்னால் நம்ப மாட்டாய்நேற்று நீயென் கனவில் வந்தாய்இதோ இப்போதென் முன்னே தோன்றுகிறாய்கனவில் வருவதற்கு முன்உன்னைப் பற்றியெனக்குஎதுவுமே தெரியாதுகேள்விப்பட்டதோடு சரிதற்செயல் நிகழ்வாயிருக்க சாத்தியமில்லைகனவில் எத்தனையோ வரும் போகும்ஒரு பிள்ளையார் எறும்பு வருமாஅப்படியே வந்தாலும் மறுநாளேநேரில் தோன்றுமாஅதை விடுநீ வெகுவேகமாய் எங்கோ செல்கிறாய்சற்றே கொஞ்சம் நின்று என்னுடன் சௌக்கியம் பேசு என்ன அதிசயம் என்றால்உன் கூட்டாளிகள் இல்லாமல் தனியாகச் செல்கிறாய் இப்போது உன்னைப் பார்க்கும்போதுஎன் வாழ்நாள் பூராவும் நீஎன்னோடு இருந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்இருந்தும் இல்லாதிருந்திருக்கிறாய்அதனாலேதான் கனவில் தோன்றினாய் உன் … Read more

ஔரங்ஸேப் 100 விழா பேருரை பற்றி நிர்மல்

அதிகாரம் குறித்தும், அதைப் புரிந்து கொள்வதிலும், அதிலிருந்து எப்படி தப்பிக்க என்பது போன்றவற்றைக் குறித்து இங்கு பேசப்படும் பல செய்திகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருப்பவர் சாரு. இன்னும் சொல்லப் போனால் அதிகாரம் குறித்து மிக நுணுக்கமாக, மைக்ரோ லெவலில் உள் மனதளவில் உரையாடுவது சாருவின் எழுத்துக்களில் ஒரு அங்கம்.  எல்லோரும் அதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்று சொன்னால், அது ஏதோ ஒரு அரசியல் அல்லது பொருளாதார அரசியல் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என எடுத்துக் கொள்வோம். சாரு … Read more