நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகள் (2)

அத்தியாயம் 1 அருமையான தொடக்கம். சரித்திரக் கதைகளையே விரும்பிப் படிக்கும் எனக்கு திருநெல்வேலி அல்வா கிட்டியுள்ளது. – ஹேமலதா குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது – மலர் ஈஸ்வர் கதை சொல்லலின் தொடக்கமே, வாரணம் ஆயிரம். சாரு நிவேதிதா, தமிழ் இலக்கியத்தின் தமிழ்மகன். – கவி சிவா இந்துக்கள் இதை மனப்பக்குவத்துடன் எந்த வித மதத்துவேஷம் இல்லாமல் வாசிப்பார்கள். ஏன் நமது வீரத்துறவி விவேகானந்தர் கூட பல பொக்கிஷங்களை தன்னடத்தே கொண்ட மார்க்கம் என … Read more

ஔரங்கசீப் – எதிர்வினைகள் – 1

நான்தான் ஔரங்கசீப்… நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன். இதுவரை நாவலின் அத்தியாயங்கள் சுமார் 30000 வாசிப்புகளை எட்டியிருக்கிறது. 3000 பேர் படித்திருப்பார்கள் போல. ஆனால் ஆரம்பித்தால் முடிக்காமல் இருக்க முடியாது. எனவே இந்த 3000 என்ற எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. சில பேர் இதெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்ததில்லையே என்று எழுதியிருக்கின்றனர். அதனால்தானே நாவலாக எழுத வேண்டியிருக்கிறது? பாட நூல்களில் அரசாங்கம் என்ன எழுத விரும்புகிறதோ அதைத்தானே எழுதும்? மேலும், நான் எழுதுவது … Read more

குருவும் சிஷ்யையும்… (குறுங்கதை)

இந்த ஒன்றரை ஆண்டுகளில் நேற்றுதான் முதல் முதலாக அவந்திகா வெளியே செல்கிறாள்.  சின்மயா நகரில் உள்ள அவளுடைய அம்மா வீட்டுக்கு.  மைலாப்பூரிலிருந்து தூரம்தான்.  டாக்ஸியில் போக மாட்டேன் என்று சொல்லி விட்டதால் நண்பர்கள் யாருடைய காராவது தேவை.  காரோட்டியுடன்.  ஆள் ஔரங்கசீப் மாதிரி ஒழுக்கசீலராக இருக்க வேண்டும்.  தண்ணி கிண்ணி அடித்துக் கொண்டு, நிறைய கேர்ள் ஃப்ரென்ஸெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் – வேண்டாம், பெயரைச் சொல்லாமலேயே யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் – அந்த ஆள் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (19): வா.மு. கோமு

யாரு பதிவு போட்டா என்னான்ற காலத்துல இருந்து இவன் தான் போட்டான்னு உடனே தெரிஞ்சிக்கிற காலத்துல இருக்கோம்ல! ஆமா கோமு! சின்னப்பய அவன்.. வுடுங்கோ! இப்பவும் என் நட்புல பழகின நண்பரும் உங்களை எழுதிட்டே இருக்காப்டி.. ஏற்கனவே ஜெயமோகனையும் எழுதி ஓய்சிட்டாப்டி! புதுசா உங்களை பிடிச்சிட்டாப்டி! அடுத்த எழுத்தாளனை திட்டுறக்கெ நேரம் ஒதுக்கி இப்பிடி முக்கி முக்கி பதிவு போடுறாங்களே.. அவிக (இலக்கிய) எழுத்துக்கு நம்ம எழுத்துல ஒரு நேர்மை இருக்குன்னு புரிஞ்சிட்ட நாள் இன்னிக்கி தான்!

கலைஞனும் ரசிகனும்…

மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் ஆண் மைய வார்த்தைகள்.  பொதுவாக நான் இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தவிர்க்கவே முயற்சிப்பேன்.  ஆனால் கலைஞி என்றால் நன்றாக இராது.  ”ன்” ஐ நீக்கி “ர்” போட்டால் வேறு அர்த்தமாகி விடும்.  எனவே மரபு ரீதியாகவே “ன்”னோடு விட்டேன்.  கலைஞன் என்ற வார்த்தை எழுத்தாளருக்கும் பொருந்தும்.  புதுமைப்பித்தன் ஒரு கலைஞன்.  ஆனால் ரசிகர் என்ற வார்த்தை வாசகருக்குப் பொருந்தாது.  வாசகர் என்பவர் என்பவர் ரசிகரை விட உசந்த நிலையில் இருப்பவர்.  எனவே மேலே … Read more