ரஜினியும் சுவாமியும்

நான் மோடி ஆதரவாளன் அல்ல; மனித சுதந்திரம் பற்றிக் கவலைப்படும் யாருமே இன்றைய நிலையில் மோடி ஆதரவாளராக இருக்க முடியாது. அவர் மூலம் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸம் மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. எனவே நான் மோடியை எதிர்க்கிறேன். மோடியை விட ஊழல் காங்கிரஸ் தேவலை. ஏனென்றால், ஃபாஸிஸத்தை விட ஊழல் பரவாயில்லை. அதற்காக, இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாலேயே மோடியின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருக்க மாட்டேன். காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை நீக்கியது … Read more

எஸ்ஸெண்டெம் க்ளப்

ஊரெல்லாம் சொல்கிறதே, படித்து விடலாம் என்று அந்தப்  புத்தகத்தை வாங்கித் தரச் சொல்லி குமரேசனிடம் சொன்னேன்.  வாங்கிக் கொடுத்தார்.  முதல் பக்கத்தை ஆசையுடன் புரட்டினேன்.  மேற்கத்திய நாடுகளில் ஒரு வகை க்ளப் இருக்கிறது.  அதில் பணம் கட்டிச் சேர்ந்து கொண்டால் நம்மை ஒரு தூணில் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பார்கள்.  கன்னத்தில் அறைவார்கள்.  ஊசியால் உடம்பு பூராவும் குத்துவார்கள்.  இன்னும் பலவித ஆக்கினைகள் செய்வார்கள்.  இதற்கெல்லாம் நாம் காசு கொடுக்க வேண்டும்.  ஏதோ எஸ்ஸெண்டெம் கிளப் என்று … Read more

கேள்வியும் பதிலும்…

சாரு நட்பு வட்டம் – 1எதிர்க் கருத்து, விமர்சனம் என்று சொன்னேன் அல்லவா? செல்வகுமார் கணேசன் சாரு மீது நியாயமான விமர்சனம் வைத்தார். ப்யூகோவ்ஸ்கி எனக்கு குமாஸ்தா அல்லது ஆஃபீஸ் பாய் போல என்று சாரு சொல்கிறார். நல்லது… ஆனால் அராத்து, அய்யநார் விஸ்வநாத்தை எல்லாம் உலக ரேஞ்சிக்கு புகழ்கிறாரே, அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?அராத்து, அய்யனார் எல்லாம் ப்யூகோவ்ஸ்க்கியை விட மிகப்பெரிய ஆளுங்களா? ***மேலே உள்ளதை பதிவு செய்திருப்பவர் அராத்து. கேள்வி கேட்டவர் செல்வகுமார் … Read more

இப்படியும் ஒரு சந்தர்ப்பம்…

சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வளரும் பூனைகளை குறவர்களை வைத்துப் பிடித்துக் கொண்டு போகச் செய்கிறார்கள்.  அதுதான் சென்னையில் வழக்கம்.  குறவர்கள் அந்தப் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் சமைத்துச் சாப்பிட்டு விடுவார்கள்.  அதிர்ஷ்டவசமாக நான் குடியிருக்கும் அடுக்குமாடி ஆசாமிகள் குறவர்களை அழைக்கவில்லை.  இனிமேல் பூனைகளுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்.  இவர்களைப் பகைத்துக் கொண்டு வாழ என்னால் முடியவில்லை.  நல்ல தனி வீடாகவும் கிடைக்கவில்லை.  எங்கே போனாலும் பூனை, நாய் இருக்கக் கூடாது; … Read more

புத்தக விழா

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இந்த 2020-ஆம் ஆண்டு புத்தக விழாவை என் வாழ்நாளில் மறக்க இயலாது.  இப்படியான கொண்டாட்டம் இதுவரை என் வாழ்வில் நடந்ததில்லை.  இனிமேல் எழுத்தாளனை தமிழ் சமூகத்தில் கொண்டாடவில்லை என்று சொல்ல மாட்டேன்.  குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை அவர்களின் வாசகர்கள் அதி உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.  சந்தேகமே இல்லை.  அப்படிக் கொண்டாடப்படுகின்றவர்களில் அடியேனும் ஒருவன் என்பதை இந்தப் புத்தக விழாவில் கண்டு கொண்டேன்.  இதற்குக் காரணமானவர்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கைத் துவக்கி என் புத்தகங்களைக் கிடைக்கச் … Read more

நேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்

ஜீனியஸ் என்று நான் மதிக்கக் கூடியவர்களை வெகு அரிதாகவே சந்தித்திருக்கிறேன்.  எழுத்து உலகில் தேவதச்சனை சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ் என்று சொல்லலாம்.  அந்தக் காலத்து சாக்ரடீஸைப் போல அவரைச் சுற்றி எப்போதும் பத்து இளைஞர்கள் குழுமியிருப்பார்கள்.  ஜீனியஸ்களின் ஒரு முக்கிய அடையாளம், நல்ல உரையாடல்.  தேவதச்சன் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் பேசுவார்.  பேச்சு என்றால் மேடைப் பேச்சு அல்ல; உரையாடல்.  அதிக பட்சம், நாள் கணக்கில்.  தேவதச்சனுக்கு அடுத்தபடியாக நான் பார்த்த ஜீனியஸ் நேசமித்ரன்.  … Read more