மரணத்தை அவ்வளவு எளிதாகப் பரிசளித்து விட முடியாது : செல்வகுமார்

ஒரு இளம் கவிஞர் முகநூலில் என்னை தேவடியாள் மகனே என்றும் செத்துப் போ என்றும் சொல்லியிருக்கிறார்.  பல நூறு பேரால் பகிரப்பட்ட அந்தப் பதிவு எனக்கும் வந்தது.  நான் இப்போது சொல்லப் போவதை வாசகர் வட்ட நண்பர்கள் கூட நம்பப் போவதில்லை.  சத்தியமாகச் சொல்கிறேன்.  தேவடியாள் மகனே மற்றும் செத்துப் போ என்ற வார்த்தைகள் எனக்கு ஆசானே, உன்னை ஆராதிக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளாகத்தான் தோன்றின.  இப்போது எனக்கு அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  அவருக்கு நான் … Read more

கார்ல் மார்க்ஸ் நூல்கள் வெளியீட்டு விழா பேச்சு – காணொளி

நேற்றைய புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது.  அது பற்றி இன்று காலை ஒரு சிறுகதை எழுதினேன்.  பிறகு வெளியிடுகிறேன்.  இப்போது நேற்றைய பேச்சின் காணொளி.  ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

விழா பதிவுகள் – 31

டாக்டர் ஸ்ரீராம் ராஜா அண்ணாமலை மன்றம் சென்றிருந்தார்.  அது பற்றி அவர் எழுதியிருந்த பதிவு: இன்று சில procedures-க்காக ராஜா அண்ணாமலை மன்றம் போயிருந்தேன். மேலாளர் என்னிடம், “நீங்கள் அவரின் மகனா?” என்று கேட்டார். “இல்லைங் சார், ரீடர் அண்ட் ஃப்ரெண்ட்,” என்று சொன்னேன். “அன்னிக்கு அவ்வளவு கூட்டம் வந்திருந்துச்சே? அவங்கள்லாம் சாரோட ரிலே(ட்)டிவ்ஸா?” என்று கேட்டார். “அத்தனை பேரும் சாரோட ரீடர்ஸ்,” என்றேன். “இவளோ இளைஞர்கள இந்த ஹால்ல நான் பார்த்ததில்ல. ஆல் தெ பெஸ்ட்,” … Read more

தினமலரில் ஒரு சிறிய நேர்காணல்…

கோவை தினமலர் இன்றைய பதிப்பில் என்னுடைய சிறியதொரு நேர்காணல் வந்துள்ளது.  தினமலர் மின்னிதழிலும் பேட்டியைக் காணலாம். http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2016/03/19/ArticleHtmls/19032016256008.shtml?Mode=1  

வாசகர் வட்டத்திலிருந்து இன்னொரு இளம் எழுத்தாளர்…

கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, கார்ல் மார்க்ஸ்… இன்னும் புத்தகமாக வர வேண்டியவர்கள் செல்வகுமார் கணேஷ், நிர்மல் (இவரிடம் எக்கச்சக்கமான சரக்கு இருக்கிறது), ஜெகா, பூர்ணசந்திரன்… இப்போது என் மனம் கவர்ந்த, தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த பிரபு காளிதாஸ்… (மை டியர் பிரபு, வெளியீட்டு விழாவுக்கு மட்டும் என்னை அழைத்து விடாதீர்கள்.  ப்ளீஸ்.  வேண்டுமானால் இரண்டு பேரும் ராயர் கஃபேவில் தனியாக ஒரு வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம்.  இம்சை இல்லை…)