உருமாற்றம்

பார்வையற்றவனுக்குப் பார்வையும்செவியில்லாதவனுக்கு செவியும்வாய் பேசாதவனுக்கு வாயும்மனம் பிறழ்ந்தவனுக்கு மனமும்நிதியற்றவனுக்கு நிதியும்மதியற்றவனுக்கு மதியும்கிடைத்தாற்போல் மகிழ்கிறேன் இப்போது என்னால்அணில் குஞ்சுகளிடமும்கிளி குயில் மைனா போன்ற பட்சிகளிடமும்மற்றும் இன்னோரன்ன பிராணிகளிடமும்விலங்குகளிடமும்தாவரங்களிடமும்உரையாட முடிகிறதுஒருநாள் தேன்சிட்டுமலரில் தேனுண்ணும்ஒலியைக்கூட கேட்க முடிந்தது இன்னொரு நாள்கரையான் கூடுகளில் கரையான்கள்மண்ணில் புரியும்மௌன உழைப்பைக்காண முடிந்தது இதுவரைவெறும் சொல்லாகவே இருந்தஆன்மா என்பதும்இப்போது அருகில் வந்துஉரையாடுகிறது எல்லாவற்றையும்விட,முதுகில் குத்தி விட்டுமூச்சு வருகிறதா எனகை வைத்துப் பார்ப்போரைமன்னிக்க முடிகிறது

புதிர்

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மதுபானக் கூடம் எனக்குப் பிடித்தமானது திறந்த வெளி வேப் புகைக்கத் தடையில்லை கண்ணெதிரே நீச்சல் குளம் இறங்கிக் குளிக்கப் பிடிக்காது பார்க்கப் பிடிக்கும் எப்போது போனாலும் நீச்சல் குளத்தில் சிரித்த முகம் கொண்ட அந்த சிரிப்பு நடிகர் நீச்சலடித்தபடியே இருப்பார் அறுபது வயது என்கிறது விக்கிபீடியா முப்பது கூட சொல்ல முடியாது ஒருநாள் மாரடைப்பில் காலமானார்

ஆல்பெர் கம்யூவும் பயத்தம் பருப்பும்

1 என் அகவை எழுபத்து மூன்றுநூற்றி அறுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். இன்று காலை என் மனையாள் சொன்னாள்:‘பயத்தம் பருப்புக்கு நிறைய தண்ணீர் வைக்கக் கூடாது, துவரம் பருப்புக்கு வைக்கலாம்.’ ஆல்பெர் கம்யூ தன் ஆயுள் முழுதும்இதையே சொன்னான்அவன் மரணமும் அப்படியே ஆனது லூர்மரினில் இருந்து பாரிஸுக்குஅறுநூற்று அறுபது கிலோமீட்டர்.ரயில் டிக்கெட் வாங்கியிருந்தான். ஆனால் அவன் நண்பன், பதிப்பாளன் மிஷல் காலிமார்,‘வா, என் லக்ஸுரி Facel Vega காரில் போகலாம்’என்றான். ஜனவரி 4, 1960. கடும் பனிப்பொழிவு சாலை கண்ணாடிபோல் … Read more

நிழலுடன் நடனமாடுதல்

பிடித்த கவிஞர்என்பதால் படித்தேன்வாழ்க்கை வரலாறுஎல்லா தேர்விலும் முதல் மதிப்பெண்பொறியியல், பௌதிகம், வானவியல்—சர்வதேச உச்ச நிறுவனங்களிலிருந்துஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பட்டம்கணிதப் பேராசிரியர், பௌதிகப் பேராசிரியர்.நூற்றி ஐந்து வயது வரை வாழ்ந்தார்விளம்பரத்தில் வருவதற்குஹாலிவுட் நடிகைகளின் கட்டணம்.எமது மொழியின் உச்ச கவிஞரெனஇன்னொரு உச்ச கவிஞரால் உறுதி. நான்?பள்ளித் தேர்விலேயே தோல்வி.இருபது ஆண்டுகள் ஸ்டெனோ அடிமைமணமான நாள் முதலாய் குடும்ப அடிமை.குடிக்கவும் உரிமை இல்லை.கவிதை எழுதினால் நிச்சயமாய்உண்டு நூறு வாசகர்அதில் அம்பது பேர் சொல்கிறார்கள்:‘இது கவிதையே இல்லை!”ஒரு சக கவிஞர் ஆறுதல்:‘நம் கவிதை … Read more

யாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்

1 நான் யாசகர் இனத்தின் நிழல்,ஈராயிரம் ஆண்டுகளின் எலும்புகளில்என் மூதாதையர் கையேந்தினர். வயல்களில் பறவைகளுடன்தானியத்தின் தூசைப் பகிர்ந்தோம்உப்பு புளி மிளகாய்—தெருக்களில் பாடி யாசித்தோம். அன்னையிடம் உழைப்பையும்கன்னியரிடம் காதலையும் காமத்தையும்நண்பரிடமும் பெயரறியா அன்பரிடமும்எண்ணிலாப் பொருளை யாசித்தேன். புரியா தவறுகளுக்கும் மன்னிப்பையாசித்தேன் ஒரு கை அன்னமளித்ததுமற்றொரு கை ஆடையளித்ததுஇன்னொரு கை இடமளித்தது ஆயிற்று அகவை எழுபத்து மூன்றுயாசகம் சலித்தாலும் மீறவொரு வழியில்லைஆசானின் இல்லத்தில்அடுத்த வேளை அன்னம்யாசித்தே பெற வேண்டும்.இது மண்ணின் விதி. 2 ஆறுதல்:அரசனே ஆனாலும்ஆசானின் தாள் பணிவான். 3 … Read more

நோபல் பரிசு – நிகானோர் பார்ரா

வாசிப்புக்கான நோபல் பரிசுஎனக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும்நான் ஒரு சிறந்த வாசகன்என் கையில் அகப்பட்டதையெல்லாம் வாசித்து விடுகிறேன் தெருப்பெயர்களை வாசிக்கிறேன்நியான் விளம்பரங்கள்கழிப்பறை வாசகங்கள்புதிய விலைப்பட்டியல்கள் போலீஸ் செய்திகுதிரைப் பந்தய முன்கணிப்புகள் மற்றும் லைசன்ஸ் அட்டைகள் என்னைப் போன்ற ஒருவனுக்குவார்த்தை என்பது புனிதமானது நீதிமான்களே, ஒரு வாசகனாகபொய் சொல்லி என்ன லாபம் அடைந்துவிடப் போகிறேன்நான் தொடர்ந்து வாசிப்பவன் எல்லாவற்றையும் வாசிக்கிறேன்வரி விளம்பரங்களைக்கூட விடுவதில்லை ஆம், இப்போதெல்லாம் அவ்வளவாக வாசிப்பதில்லைநேரமில்லை, அவ்வளவுதான்ஆனால், என்னென்னவெல்லாம் வாசித்திருக்கிறேன்! அதனால்தான் எனக்கு வாசிப்புக்கானநோபல் பரிசை வழங்கும்படிஉங்களைக் … Read more