ஒரு முக்கியமான நேர்காணல்

நியூஸ் 7 சேனலுக்காக உமா மகேஸ்வரன் எடுத்த நேர்காணல் இது.  நேர்காணலின் ஆரம்பத்தில் உமா சொன்னார்.  ஒருவரைப் பேட்டி காணச் செல்லும் போது என்ன கேள்விகள் கேட்கலாம், என்ன கேள்விகள் கேட்கக் கூடாது என்ற do’s and don’t’s ஐ யோசித்துத் தயார் செய்து கொள்வார்கள்.  ஆனால் சாரு விஷயத்தில் டொண்ட்ஸே இல்லை.  சுதந்திரமாகச் செல்லலாம் என்று வந்தேன்.  எந்தக் கேள்வியையாவது தவிர்க்க வேண்டுமா என்று கேட்டார்.  எ-ந்-த-க் கேள்வியாக இருந்தாலும் சரி என்றேன்.  அவர் சொன்னதை … Read more

உலக மாடுகளே ஒன்று படுங்கள்!

எஸ்.ரா.வின் வாதத் திறமை ஊர் அறிந்தது.  மற்றொரு ராம் ஜெத்மலானி.  அவரோடு போட்டி போடக் கூடிய ஒரே ஒரு எழுத்தாளர்தான் தமிழ்நாட்டில் உண்டு.  தினந்தோறும் தொலைக்காட்சியில் தோன்றி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  அம்மாதிரி இடத்திலெல்லாம் என்னைப் போன்ற சோனி சோப்ளாங்கிகள் பேச முடியுமா?  நேற்று புதிய தலைமுறையில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி வந்து விட்டது.  எஸ்.ரா. ஜல்லிக்கட்டு ஆதரவு.  சாமானியர்கள் பேசினால் புரிந்து கொள்ள முடிகிறது.  புத்திஜீவிகளும் எழுத்தாளர்களுமே மிருகவதைக்கு ஆதரவாகப் பேசுவதை … Read more

இரண்டு நேர்காணல்கள் மற்றும் இருநூறு ரூபாய் கடன்…

பொதுவாக தொலைக்காட்சி நேர்காணல்களில் நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது போன்ற அறிவான கேள்விகளே கேட்கப்படும்.  ஆனால் இப்போது கொஞ்சம் மாறி விட்டது.  மக்கள் தொலைக்காட்சியில் என்னோடு உரையாடிய கௌதம் மற்றும் அபர்ணா இருவரும் அந்த நேர்காணலை மிகவும் சுவாரசியமாகவே செய்தனர்.   என் எழுத்தோடு நன்கு பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தனர்.  அந்த நேர்காணல் இன்று காலை மக்கள் தொலைக்காட்சியில் காலை ஏழு மணிக்கு ஒளிபரப்பப்பட்டதாக அறிந்தேன்.  பார்த்தவர்கள் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர்.  நான் கடந்த சில … Read more

மண்ணில் தெரியுது வானம் வெளியீட்டு விழா உரை

மண்ணில் தெரியுது வானம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு எதுவும் தயாரித்துக் கொள்ளாமல் போனேன்.  சிறப்புரை திருப்பூர் கிருஷ்ணன் என்பதால் நான் ஒரு ஐந்து நிமிடம் சம்பிரதாயமாகப் பேசலாம் என எண்ணினேன்.  ஆனால் கிருஷ்ணன் பேசி முடிக்கும் போது சாருவின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ஒரு போடு போட்டு விட்டு அமர்ந்து விட்டதால் திடீரென்று களமிறக்கப்பட்ட ஆட்டக்காரனைப் போல் ஆனேன்.  இருந்தாலும் மனசு பூராவும் மண்ணில் தெரியுது வானம் பொங்கி வழிவதால் நாற்பது நிமிடங்கள் … Read more

புத்தகக் கண்காட்சி

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் இன்று முதல் ஜனவரி 24 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 124, 125) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை. மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8:30 வரை.

நிலவு தேயாத தேசம் – 12

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதிய குறிப்பு: ஒரு பயணக் கட்டுரையில் – அதுவும் துருக்கிபற்றிய கட்டுரையில் – தாஞ்சியர், ஜிப்ரால்டர் வரலாறு முதலியவற்றை எழுத முடியுமா – அதுவும் சுவாரசியமாக? அதே கட்டுரையில் தஞ்சை பிரகாஷ், ஜெயமோகன் என அனைவரும் உள்ளே வருகின்றனர் – தர்க்கம் மீறாமல். அருமை, சாரு. http://andhimazhai.com/news/view/nilavu12.html