காதலர் தினம்

இன்றைய தமிழ் வாழ்க்கை இரண்டு முக்கியமான கற்பிதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  ஒன்று, பழம் பெருமை.  இரண்டு, ஹைப்பர் ரியாலிட்டி என்ற மிகை எதார்த்தம்.  வீரம், காதல், அதிகாரம், பண்பாடு என்று எதை எடுத்தாலும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் விடுகிறது தமிழனின் சிந்தனை.  இது ஒரு பக்கம் இருக்க, மிகை எதார்த்தம் என்பது நம்முடைய வாழ்க்கையை நாமே வாழாமல் வேறு யாரோ வாழ்வதை திரையில் நிழல்களாகப் பார்த்து  அதை நம்முடைய மண்டைக்குள் திணித்துக் கொண்டு அந்த … Read more

பத்மஸ்ரீ – ஜெமோ – கார்ல் மார்க்ஸ்

பின் வருவது ஜி. கார்ல் மார்க்ஸ் தன் முகநூலில் எழுதியிருப்பது.  அதற்கு முன்னே உள்ள குறிப்பில் கார்ல் இப்படி எழுதியிருக்கிறார்: ”இந்த விருது மறுப்புக்குப் பின்னால் கலைஞனின் குரலே இல்லை என்பது தான் துயரம். இது ஜெயமோகனின் வாழ்நாள் அபத்தம். ஆமாம். ஜெயமோகன் இந்த விருதைப் பெற்றிருக்க வேண்டும். அதில் ”நான் இந்த தேசத்தின் பண்பாட்டை நம்புகிறேன். அதன் பன்மைத்துவத்தை மதிக்கிறேன். அதை மூர்க்கமாக நிராகரிக்கும் அறிவு ஜீவிகளை எதிர்க்கிறேன். அதே சமயம், இந்த பண்பாட்டை ஒற்றைப்படையான … Read more

பத்மஸ்ரீ விருது மறுப்பு குறித்து ஜி. கார்ல் மார்க்ஸ்…

ஜெயமோகனை என் உடன்பிறந்த சகோதரனை விட அதிகம் நேசிக்கிறேன்.  பெருமாளைத் துதிப்போரையெல்லாம் துதிப்பேன் என்று சொன்ன ஆழ்வானைப் போன்றதுதான் என் நிலையும்.  இலக்கியம் யாருக்கு தவமாக இருக்கிறதோ அவர் என் போற்றுதலுக்குரியவர்.  அந்த வகையில் நான் ஜெயமோகனை நேசிக்கிறேன்.  என் காலத்தில், என் வயதில் ஜெ. அளவுக்கு இலக்கியத்தையும் தன் மொழியையும் நேசிக்கும் ஒருவரை நான் கண்டதில்லை.  அதனால்தான் அவரை நான் நேசிக்கிறேன் –  எங்களுக்கு இடையிலான ஆயிரத்தெட்டு முரண்பாடுகளுடன்.  அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது ஜெய்ப்பூரிலிருந்து … Read more

மறுபடியும் முதலில் இருந்து…

குமரகுருபரன் மற்றவர்களைப் போல் இல்லை.  இந்த வாக்கியத்துக்குப் பல அர்த்தங்கள் உண்டு.  ஜெயமோகனின் நண்பர்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதில்லை.  அதைவிட என்னை என்னவோ வன ஜந்துவைப் போல் பார்ப்பார்கள்.  ஆனால் குமரகுருபரன் அப்படி அல்ல.  அன்பைத் தவிர அந்த மனிதனிடம் நான் வேறு எதையும் கண்டதில்லை.  சில சமயங்களில் ராக்ஷஸக் குழந்தை போல் பழகுவார்.  ஒரு உதாரணம்.  ஜெயமோகன் ஒரு நாள் இரவு பனிரண்டு மணி போல் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.  ஜெ.வுக்கு அது மாலை நேரம்.  ஆனாலும் … Read more

எல்லாமே அப்நார்மல்

கடுமையான பத்திய உணவு.  நீங்கள் சேர்த்துக் கொள்ளும் உப்பில் கால் அளவுதான்.  தியானம்.  நடைப் பயிற்சி.  உடலுக்கு ஊறு விளைவிக்கும் எந்தப் பழக்கமும் இல்லை, ஒன்றே ஒன்றைத் தவிர.  ராப்பகலாகப் படிப்பு.  இன்று டாக்டர் சிவகடாட்சத்திடம் போனேன்.  சோதித்தார்.  எல்லாமே அப்நார்மல்.  சர்க்கரை அளவு கூடுதல்.  கொழுப்பு அளவு கூடுதல்.  ரத்த அழுத்தம் எவ்வளவு என்று சொன்னால் உங்கள் ரத்த அழுத்தம் கூடி விடும்.  மருந்துகளை அதிகப்படுத்திக் கொடுத்தார். எழுதுவதையும் படிப்பதையும் கொஞ்சம் குறைத்தால் ரத்த அழுத்தம் … Read more