விழா பதிவுகள் – 6

என் மூன்று பிள்ளைகள்.  வெளிநாடுகளில் வசிக்கும் நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ் மூவரும் இந்த விழாவுக்காகவே வந்திருந்தனர்.  நிர்மல் முந்தின இரவு அங்கிருந்து கிளம்பி மாலை சென்னை வந்து விழா முடிந்ததும் அன்று நள்ளிரவே திரும்பவும் கிளம்பி விட்டார்.  தூங்கி 24 மணி நேரம் ஆகிறது என்றார். இவர்களுக்கெல்லாம் என் எழுத்தைத் தவிர தருவதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை.  இதேபோல் தில்லியிலிருந்து வந்திருந்த தரணீஷ்வரும் நிகழ்ச்சி முடிந்ததுமே தில்லிக்கு ரயில் பிடிக்கக் கிளம்பி விட்டார்.  மூன்று … Read more

நெஞ்சோரத்தில்…

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிறேன்.  பாடலைப் பாடிய சுப்ரியா ஜோஷி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெங்களூர் பெண் என்று தெரிந்தது.  இனிமையான குரல்.  விஜய் ஆண்டனியின் இசை.    

மேற்கு ஐரோப்பாவிலும் விஷம்

சுவிட்ஸர்லாந்து என்பது எப்பேர்ப்பட்ட சொர்க்க பூமி!  அங்கே இருந்து கொண்டு ஒருவரை – அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமாரை பற நாயே என்று முகநூலில் திட்டுகிறார் என்றால் சுவிட்ஸர்லாந்தையும் இம்மாதிரி ஆசாமிகள் எந்த அளவுக்கு விஷமாக்குகிறார்கள் என்று பாருங்கள்.  ஒருவரை அகதியாக ஏற்றுக் கொண்டு அவருக்கு இந்தியா போன்ற நாடுகளில் கனவு கூட காண முடியாத அளவுக்கு, இங்கே வாழும் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை விடப் பல மடங்கு சிறந்த வாழ்க்கையை நல்கும் … Read more

விழா பதிவுகள் – 5

அன்புள்ள சாரு, இதை எங்கு பதிப்பது என்று தெரியவில்லை. ஆகவே உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன். சென்னை ஒரு சுவாரஸ்யமான நகரம். எல்லோர் ஆசாபாசங்களுக்கும், அபிலாஷைகளுக்கும்,  ஆர்வத்துக்கும் எப்பொழுதும் தீனி போடுமிடம். நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றம் சாருவின் வாசக இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது! அசோகமித்திரன் தன் தள்ளாத வயதிலும் தடியூன்றி நடந்து வந்தார். எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சமஸ், திருப்பூர் கிருஷ்ணன், எடிட்டர் லெனின், டாக்டர் சிவகடாட்சம், அவர் மனைவி, நாகூர் ரூமி என்று ஏகப்பட்ட … Read more

விழா பதிவுகள் – 4

நேற்றைய விழாவில் மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு என்று எல்லோரும் சொன்னது, நம்ப முடியாது, பத்ரி சேஷாத்ரி.  நம்ப முடியாது என்ற வார்த்தைக்கு பத்ரி மன்னிக்கவும்.  அவருடைய பேச்சு எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்கு எதிரான இடத்தில் சஞ்சரிக்கும்; அவருடைய பேச்சு எப்போதும்  அறிவார்த்தமாகவே இருக்கும்.  ஆனால் நேற்றைய பேச்சு இது பத்ரியா என ஆச்சரியமடைய வைத்தது.  நான் மட்டும் இல்லை; பல நண்பர்கள் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டனர். மனுஷ்ய புத்திரனின் பேச்சு பொதுவாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அந்தரங்கமான வெளியில் சஞ்சரிப்பதாக … Read more

ஸ்விட்ஸர்லாந்து போனாலும் விடாத சாதித் திமிர்…

சாதித் திமிரும், நிலப்பிரபுத்துவ பண்ணையார் மனோபாவமும் கொண்ட, இலக்கியம்-சினிமா-இசை- ஓவியம் போன்ற எந்தத் துறை குறித்தும் அறிவோ பிரக்ஞையோ இராத, பாமர ரசனை கொண்ட சிலரால்தாம் ஈழத் தமிழர்கள் இத்தனை பெரிய இன்னல்களை அடைந்தார்கள்.  இதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  ஈழத் தமிழரின் துயரம் பற்றி உலகில் எந்த ஒரு பதற்றமோ செய்தியோ எழாததற்கும் இப்படிப்பட்ட சாதித் திமிர் கொண்ட பண்ணையார்கள் தான் காரணம்.  வேடிக்கை என்னவென்றால் இது போன்ற ஆட்கள் நாகரீகமடைந்த மனிதர் … Read more