தேர்தல் கணிப்பு

அன்புள்ள சாரு, தங்கள் தேர்தல் கணிப்பின் ரசிகன் நான். இம்முனற எப்படி இருக்கும்? ஆவலுடன் வினோத்   அன்புள்ள வினோத் ஒவ்வொரு தேர்தலிலும் மிகத் துல்லியமாக முடிவுகளைச் சொல்லி விடும் எனக்கே இந்த முறை விழி பிதுங்குகிறது.  சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு படம் சொதப்புவதைப் போல் அதிமுகவின் கடந்த ஒரு ஆண்டு ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் அதிமுகவின் மீது மக்களுக்குக் கடும் வெறுப்பு இல்லை.  சென்னை, கடலூர் மட்டும் விதிவிலக்கு.  இன்னொரு மிக முக்கியமான, ஆச்சரியமான … Read more

அறம் பொருள் இன்பம் : முதல் விமர்சனம்: தர்ம அடி

ஃபெப்ருவரி 27 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கும் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுகமாக இருக்கும் என்னுடைய சில புத்தகங்களில் ஒன்று, அறம் பொருள் இன்பம்.  ஆறு மாத காலம் அந்திமழையில் தொடர்ந்து நான் எழுதி வந்த கேள்வி பதில் தொகுப்பு.  அந்த நூல் இப்போது விற்பனைக்கு வந்து விட்டது.  அதன் அட்டை இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.  எனக்கே அந்த அட்டையைப் பார்த்த போது ஏதோ இடிக்கிறதே என்று தோன்றியது.  ஆனால் என்ன … Read more

ஒன்பது புத்தகங்கள் என்னென்ன?

ஒன்பது புத்தகங்கள் என்னென்ன என்பதில் எந்த ரகசியமும் இல்லை.  அது பற்றி எழுத எனக்கு நேரமில்லை. தினமணி இணைய இதழில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் என் ஞாபகத்திலிருந்து எழுதவில்லை.  ஒவ்வொரு எழுத்தாளரின் புத்தகங்களையும் மீண்டும் படித்து விட்டே எழுதுகிறேன்.  எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.  இப்போது நான்கு தினங்களுக்குள் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் இரண்டையும் அடுத்த வாரத்தில் ஆதவன் எழுதிய சிறுகதைகளையும் படிக்க வேண்டும். … Read more

காதலர் தினம் : ஜி. கார்ல் மார்க்ஸ்

நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் கணேசகுமாரனின் “மிஷன் காம்பவுண்ட்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. சாரு நிவேதிதாவும், ராஜசுந்தரராஜனும் மற்றும் பலரும் பேசினார்கள். ராஜசுந்தரராஜன் தனது உரையில் ‘Status quo’ என்றால் என்ன (“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு எதிர்நிலை) என்பது குறித்த தத்துவ அடிப்படையையுடன் உரையைத் தொடங்கினார். சாரு பேசியபோது, இந்த Status quo அடிப்படையின் சமகால உதாரணங்களுடனும் அன்பை முன்னிறுத்தும் எழுத்தென்பது எவ்வாறு வன்முறையை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்றும் “உன்னுடைய … Read more

கணேச குமாரனின் மிஷன் காம்பவுண்ட்

கணேச குமாரனின் மிஷன் காம்பவுண்ட் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நேற்று காலை பதினோரு மணி அளவில் நடந்தது.  நானும் கார்ல் மார்க்ஸும் சரவணனும் சென்றிருந்தோம்.  பத்து மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லியிருந்ததால் பப்புவுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு, ஸோரோவுக்கு உணவு கொடுக்க நேரமில்லாமல் ஒன்பதரை மணிக்கே கிளம்பி விட்டேன்.  ஸோரோவுக்கு உணவு கொடுப்பது எளிதல்ல.  பத்துப் பதினைந்து நிமிடம் பிடிக்கும்.  ஒன்பதரைக்குக் கிளம்பினால் பத்து மணிக்கு கே.கே. நகர் (என்ன ஒரு ’அழகான’ பெயர்!) … Read more