பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 9

செல்லப்பாவுக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்துவிடவேண்டும் என்று நா.பா. உறுதியாக இருந்த போது, செல்லப்பா மிகக் கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார். சாப்பாட்டுக்குக் கூட ஏதுமில்லாத நிலை. சாகித்ய அகாதமியின் 50000 ரூபாயை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செல்லப்பா. ஒரே காரணம்தான். சாகித்ய அகாதமியின் தேர்வுகளில் செல்லப்பாவுக்கு மரியாதை இல்லை. ஆள் பிடித்து வாங்குகிறார்கள் என்று நினைத்தார். மேலும் படிக்க: http://bit.ly/1rNgcH8

Tamil Nadu Elections : Not Much To Choose… http://newsable.asianetnews.tv

ஏஷியாநெட் டிவியின் இணைய தளம் ஒன்று துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.  அதில் என்னுடைய பத்தி (Column) நேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  முதலில் தமிழக தேர்தல் பற்றி.  இந்தத் தேர்தல் பற்றி நான் அதிகம் கருத்து சொல்லவில்லை.  இந்துவில் அன்புமணி பேட்டிக்கு ஒரு மறுப்பு எழுதியதோடு சரி.  நேற்று கூட வீட்டுக்கு ஒரு கூட்டம் ஓட்டு கேட்டு வந்தது.  ஒருத்தர் பாக்கியில்லாமல் ரவுடிகள்.  எல்லோருடைய கழுத்திலும் அடை அடையாக தங்கச் சங்கிலி.  தாம்புக் கயிறு சைஸுக்குப் போட்டுக் கொண்டு … Read more

எங்கே உன் கடவுள்?

பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற புத்தகத்தின் அலையில் அதோடு வந்த மற்ற புத்தகங்கள் கவனிக்கப்படாமல் போய் விட்டன போல் தோன்றுகிறது.  இன்றைய தினமலரில் எங்கே உன் கடவுள்? என்ற தொகுப்புக்கான மதிப்புரை வந்துள்ளது.  மதிப்புரை எழுதியவர் க.சீ. சிவகுமார்.  தினமலருக்கும் சிவகுமாருக்கும் நன்றி.  நொச்சிக்குப்பத்தில் மீன் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மதிப்புரை பற்றி குறுஞ்செய்தி அனுப்பியவர் இறையன்பு ஐஏஎஸ்.  எங்கே உன் கடவுள் கட்டுரைகள் துக்ளக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.  துக்ளக் … Read more

நிலவு தேயாத தேசம் பற்றி…

அந்திமழை இணைய இதழில் நிலவு தேயாத தேசம் தொடரை அதிக நேரம் செலவிட்டு மிகவும் ஈடுபாட்டுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  சென்ற வார அத்தியாயத்தை எழுதும் போது அந்த அத்தியாயம் கொடுத்த உணர்வுகளால் தாக்குண்டு அதீதமான ஓர் மனநிலையில் இருந்தேன்.  அந்த அத்தியாயத்தைப் படித்த பலரும் அதே வித உணர்வை அடைந்ததாக எழுதியிருந்தார்கள்.  அது ஒரு பயணக் கட்டுரை மட்டும் அல்ல; நமது தேசத்தையும் ஐரோப்பாவையும் மேலும் அறிந்து கொள்வதற்கான ஓர் முயற்சி. இன்று வந்த கடிதம்: அன்புள்ள … Read more

நிலவு தேயாத தேசம் – 28

துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். … Read more