ஒரு கோப்பை ஒய்ன்…

சமீபத்தில்தான் கவனித்தேன். நான் இணைய தளத்தில் எழுதினால் காசு வருகிறது. எழுதாவிட்டால் வருவதில்லை. ஆகா, எத்தனை அட்டகாசமான விஷயம். கடந்த ஒரு மாதமாக ஔரங்கசீப் காரணமாக, இணைய தளத்தில் எழுதுவதில்லையா? சந்தா/நன்கொடையும் வருவதில்லை. ரொம்பவும் சந்தோஷமாகி விட்டது. ஆக, எழுதினால் சம்பாதிக்கலாம் என்ற உறுதி இருக்கிறது.

சமீபத்தில் என் தோழியிடம் சொன்னேன். பணத்தைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு பெண்களை தூரத்தில் வைத்து விட்டேன். ஆகா, நல்ல விஷயம் என்றாள். என்ன ஒரு சேடிஸம்.

என் பத்து இருபது கரங்களில் ஒருவருக்கு cerebral haemorrhage வந்து முந்தா நாள் முழுக்கவும் மருத்துவமனையில் கழிந்தது. நன்றாகி விடுவார். அவரும் நானும் வாரம் ஒருமுறை ரெய்ன் ட்ரீயில் சந்தித்து ஒரு கிளாஸ் ஒயின் நானும் ரெண்டு கிளாஸ் ஒயின் அவரும் குடிப்போம். கடந்த பல மாதங்களாக வாரம் ஒருமுறை போன் செய்து அழைத்துக் கொண்டிருந்தார். நான் கொரோனா பயத்தில் போகாததால் சலித்துப் போய் விட்டு விட்டார். அவருக்கு நண்பர்கள் சென்னையில் இல்லை. அது மட்டும் அல்லாமல், recluse என்ற வார்த்தையின் உதாரணம் அவர். ஒன்றரை ஆண்டுகளாக வேலை நெருக்கடி. பத்து ஆள் வேலையை அவர் ஒருத்தர் செய்தார். நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மத்திய அரசு. மேட்டுக்குடி. ரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் ரத்தக் கசிவு.

அவருடைய டிரைவர் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தார். நாள் முழுவதும். என் கடவுள் சார், என் கடவுள் சார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இருபது பூனைகளுக்கும் அவர்தான் கடவுள். மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய்க்குப் பூனை உணவு அனுப்பி வைத்து விடுவார். (மொத்தம் முப்பது முப்பத்தைந்தாயிரம் வரும் என்று நினைக்கிறேன். கணக்குப் போட்டதில்லை. இதோ இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதே பத்து இருபது காகங்கள் கரைகின்றன. உணவுக்கு.) அந்தப் பூனைகளின் அன்பே அவரைக் காப்பாற்றி விடும் சாரு என்றாள் அவந்திகா. காப்பாற்றி விடும்தான்.

ஆனால் நான் அவரோடு வாரம் ஒருமுறை ஒரு கிளாஸ் ஒயின் அருந்தியிருந்தால் இந்த ப்ரெய்ன் ஹேமராஜே வந்திருக்காது என்று நூற்றுக்கு நூறு உறுதியாக நம்புகிறேன். சொல்லிக் கொண்டே இருந்தார். முடியவில்லை சாரு, முடியவில்லை சாரு என்று அனத்திக் கொண்டே இருந்தார். தில்லி மாதிரி இல்லை சென்னை என்பார். இத்தனைக்கும் தலைமைப் பொறுப்பு. இங்கே உள்ள வொர்க் கல்ச்சர் ஆளைக் கொன்று விடும் என்பார். ஞாயிற்றுக்கிழமை பேசினார். திங்கள் கிழமை விரிவாகப் பேசுவோம் என்றார். திங்கள் கிழமை மருத்துவமனை.

சமூக நலன் கருதி ஒரு சமூக விரோதி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கொன்றும் இல்லை. எத்தனையோ பேர் கண் முன்னால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசும் நடவடிக்கை எடுத்தது. எடுத்த பிறகுதான் சமூக விரோத நடவடிக்கை இன்னும் மும்முரமாக நடக்க ஆரம்பித்துள்ளது. நண்பரின் மூலம் அதைத் தடுக்க நினைத்தேன். முடியாமல் ஆகி விட்டது. வழக்கம் போல் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு விலகி விட்டேன்.

குடித்தால் செத்து விடுவாய் என்று பல பெண்கள் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சனிக்கிழமை கூட ஒரு பெண் என்னிடம் அப்படிச் சொன்னார். ஒருத்தருக்குக் குடிக்காததால் ப்ரெய்ன் ஹேமராஜ் வந்ததை இப்போது பார்க்கிறேன். இனிமேல் அவர் குடிக்கவே முடியாது என்று நினைக்கிறேன்.

அவர் நாத்திகர் என்பதால் தியானம் போன்ற விஷயங்களை அவருக்கு நான் சொல்ல முடியவில்லை. உயர்தரமான ஒய்னை அளவாகக் குடித்தால் நண்பருக்கு நடந்ததைப் போன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம். ஆறு மாதமாக அவரது ரத்த அழுத்தம் உயர்ந்து கொண்டிருந்ததைப் பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் அவருடைய ஒரே நண்பன் நான்தான். நானும் வீட்டோடு அடங்கி விட்டேன். குடும்பத்தினால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். அழ மட்டுமே முடியும்.

குடி பற்றி என்னிடம் அறிவுரை சொல்பவர்களை மிகவும் பரிதாபத்துடன் பார்க்கிறேன். அவர்களுக்கு எழுத்தாளன் என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று ஜெயமோகன் எழுதியுள்ள ஒரு கட்டுரையைப் படித்தால் எழுத்தாளன் என்றால் யார் என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு வாசகியின் கேள்விக்கு எழுதியுள்ள பதில். அந்த பதிலை நான் அநேகம் தடவை இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறேன். எழுத்தாளர்களின் கர்வம் பற்றிய கேள்விக்கான பதில் அது.

மீண்டும் ஆரம்பித்த இடம். பணம் வராதது மகிழ்ச்சியைத் தந்தது. எழுத ஆரம்பித்தால் பணம் வருகிறது. ஔரங்கசீப்பை முடித்து விட்டு மீண்டும் தளத்தில் எழுத ஆரம்பிக்கிறேன். ஆனால் இடையிடையே இப்படி தளத்தில் எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.

முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்பி வையுங்கள்.

***

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai