நான்தான் ஔரங்கசீப்… எதிர்வினைகள் (3)

வணக்கம் தல,

நலமா.

ஔரங்கசிப் மிகச்சிறப்பாக போகிறது. தொடர்ந்து வாசிக்கிறேன். கூடவே வாசகர்கள் Comments ம் படிக்கிறேன். நிறைய புதிய வாசகர் களம் ஒன்று உருவாகியிருக்கிறது உங்களுக்காக. அது இலக்கிய உலகில் வழக்கமாக சிக்கிக்கொண்டிருக்கும் காழ்ப்பரசியல் தெரியாத புது வாசகர்களம்.

சாருவின் மேல் ஒவ்வாமை கொண்டுள்ள பலரும்கூட ஔரங்கசிப்பை சிலாகிக்கத்தொடங்கியிருக்கிறதைப் பார்க்கிறேன். மிக மகிழ்ச்சியான தருணம். ஔரங்கசிப்பிற்காக நீங்கள் கொடுத்த உழைப்பிற்கு இதுதான் பலன். இது இந்தியாவில் ஔரங்கசிப் பற்றி வந்திருக்கும் நாவல்களில் முதன்மையான ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

எந்த அழுத்தத்திற்கும் இடங்கொடாமல் தொடர்ந்து எழுதுங்கள் தல.

பிரபு கங்காதரன்