கும்பகோணத்தில் ஒரு சிற்பியின் வீட்டில் இருந்த ஒரு நாய் என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது இதை எடுத்தார் பிரபு காளிதாஸ். போஸ் கொடுக்கவில்லை. இயல்பாக எடுத்தது. சிப்பிப் பாறை. ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் எழுதிக்கொண்டிருந்த சமயம். பிரபு காளிதாஸ்தான் என்னுடைய எல்லா கட்டுரைகளுக்கும் புகைப்படம். அவரது புகைப்படங்களுக்கு ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவின் ஆசிரியர் குழுவே ரசிகர் கூட்டமாக மாறியிருந்தது அப்போது.
படத்தைப் பார்த்தால் எனக்குத் தோன்றுகிறது, உலகில் உள்ள எல்லா நாய்களும், பூனைகளும் என் மேல் அன்பு பாராட்டுகின்றன, மனித இனம் தவிர என்று.
