கரூர்

வரும் 13, 14 தேதிகளில் கரூரில் இருப்பேன்.  வாசகர் வட்ட நண்பர் தயாநிதியின் திருமணத்துக்காக வருகிறேன்.  ஆனால் கரூரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நண்பர்களைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.  ஏனென்றால், அதில் ஒரு பிரச்சினை உள்ளது.  சென்ற முறை ஏற்காடு வந்த போது கோவையில் உள்ள நண்பர்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பப்பட்டேன்.  அது தொடர்பாக பல தினங்கள் முன்பே எழுதியிருந்தேன்.  சந்திப்பதற்கு சுமார் 20 நண்பர்கள் விரும்பினர்.  நான் … Read more

குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர்

குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர் தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும்யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும்சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப்பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்டமாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.  நிலாந்தன்  சோலைக்கிளி  யோ. கர்ணன்  அ.முத்துலிங்கம்  தமிழ்க்கவிமு. நித்தியானந்தன்  சண்முகம் சிவலிங்கம் ந.இரவீந்திரன்  ஸர்மிளா ஸெய்யித்  தேவகாந்தன்பொ.கருணாகரமூர்த்திஏ.பி.எம். இத்ரீஸ்   இராஜேஸ்வரி … Read more

அராத்து பற்றி

எனக்கு ஒரு ராசி இருக்கிறது.  எனக்கு எந்த எழுத்தாளரைப் பிடிக்கிறதோ அவருக்கு என்னைப் பிடிக்காது.  உ-ம்.  சுஜாதா, அசோகமித்திரன்.  அதேபோல் என்னை விரும்பிப் படிக்கும் ஒரு எழுத்தாளரை எனக்குப் பிடிக்காது.  உ-ம். உ.த.எ. என்னது, உ.த.எ.வா என்று கேட்காதீர்கள்.  அவருக்குப் பிடிக்காதது போல் பாவனை செய்வார்.  அவ்வளவுதான்.  முதல்முதலாக தருணுக்கு என்னைப் பிடிக்க, அவர் எழுத்து என்னை இழுத்துக் கொண்டு போக என்று ஆனது.  Mario Vargas Llosa-வுக்கு அடுத்தபடியாக நான் விழுந்து விழுந்து படிக்கிறேன் என்றால் … Read more

பரவசம்

பரவசத்தைக் கடந்து சென்று விடாமல் பரவசத்திலேயே ஆழ்ந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?  போகத்தில் ஆர்கஸத்தைத் தாண்டி விடாமல் அதை நீட்டித்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு கணத்தில் அது நிகழும்… அதன் இசை உதாரணம் இது: http://www.youtube.com/watch?v=7oEHNa-_C6U

உன்னதத் தருணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் இன்று போன் செய்து பேசினார்.  என்ன பேசினார் என்று செப்டம்பர் மாதம் எழுதுவேன்.  அதுதான் சரியான நேரமாக இருக்கும்.  ஆனால் அவர் பேசி முடித்ததும் மிகுந்த உவகையும் சந்தோஷமும் ஏற்பட்டது.  என் மனம் எப்போதுமே ஒரு ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கும்.   என்னோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு அது தெரியும்.  மற்றவர்கள் – அதிலும் குறிப்பாக பெண்கள் குறிப்பிடும் mood swing என்பதே என்னிடம் இல்லை.  இருந்தாலும் இன்று எஸ்.ரா. பேசிய போது … Read more

ரௌத்ரம் பழகு…

ஒரு மனிதர் என்னை அவன் இவன் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டுத் திட்டிய போது அதை சிரித்துக் கொண்டே புறந்தள்ளி விட்டேன் என்பதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கவனித்திருப்பீர்கள்.  ஆனால் என்னுடைய அமைதி பலகீனம் அல்ல. மகாத்மா காந்தி அடிக்கடி சொல்வார் அல்லவா, அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல என்று.  அதைப் போல்தான் அமைதியும். என் எழுத்தைப் படித்தவர்களுக்கும் என்னோடு பழகியவர்களுக்கும் தெரியும், என்னைப் பாராட்டினால் பதிலுக்கு அவர்களைப் பாராட்ட மாட்டேன் என்று.  பாராட்டத் தகுதி … Read more