படித்ததில் பிடித்தது (2)

திமிங்கிலம் குறித்த சமஸின் கட்டுரையில் (17 ஜூலை) தூவி, வலசை என்ற இரண்டு வார்த்தைகள் வருகின்றன.  ”திமிங்கிலத்தின் தூவியே கடலில் ஒரு பாய்மரம் அளவுக்குத் தெரியும்.”  தூவி என்பது மயிலின் தோகை, மீனின் சிறகு.  சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த வார்த்தை வருகிறது.  வலசை செல்லுதல் என்றால் புலம் பெயர்தல்.  பின்வரும் இணைப்பில் நீலத் திமிங்கலங்களின் பாடல்களை காணொளியில் பதிவு செய்திருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=dXOo68SDTdk

படித்ததில் பிடித்தது…

சுமார் மூன்று ஆண்டுகளாக என்னைத் தின்று கொண்டிருந்த எக்ஸைல் வேலை நேற்று இரவு ஒன்பது மணியோடு முடிந்து விட்டது.  இனி அதில் கை வைக்க எதுவும் இல்லை.  அதிலும் கடந்த ஆறு மாதங்களாக நான் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் போய் விட்டது.  நேற்று இரவே பதிப்பாளருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன். காலையில் எழுந்து மூன்று மாதமாக நாட்டு நடப்பு பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தை மேய்ந்தேன்.  பாரதி விஷயமாக மோதிக் கொண்ட மேதைகள் இருவரும் … Read more

ரகளை, அட்டகாசம், பயங்கரம்…

எக்ஸைல் வேலை முடிந்து விட்டது.  முடிந்ததும் உறங்கச் செல்லும் முன் கொஞ்சம் மெயில் பார்க்கலாமே என்று திறந்தால் ஜெயமோகன் எழுதிய இந்தக் கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது.  சமீபத்தில் படித்ததில் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரை.  ஏனென்றால், ஜெயமோகன் சுட்டிக் காட்டியிருக்கும் இம்மாதிரி ஆசாமிகளை நான் வாரம் ஒருமுறையாவது எங்கெங்கோ பத்திரிகைகளில், முகநூலில் எதிர் கொள்கிறேன்.  குழந்தை பெற்று, வீடு கட்டி, குழந்தைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டு, டாக்டர் பட்டத்தோடு சினிமா விமர்சனமும் இலக்கிய விமர்சனமும் எழுத … Read more

இரவு, தனிமை, மதுப் புட்டி… கூடவே இசை…

மதுப் புட்டி என்றதும் டாஸ்மாக் ஞாபகம் வரக் கூடாது.  உயர்தரமான ஃப்ரெஞ்ச் வைன் அல்லது அனிஸ் அல்லது ரெமி மார்ட்டின் அல்லது ஸ்காட்ச்…இப்படி உங்களுக்குப் பிடித்த மது பானத்தோடு இரவில் யாருமற்ற தனிமையில் இந்த பியானோவை கேட்டுப் பாருங்கள்.  இந்த அற்புதமான கலைஞரை எனக்கு அறிமுகப் படுத்திய வடிவேல் குமாருக்கு நன்றி.    இது பற்றி நிறைய எழுதத் தோன்றுகிறது.  நேரம் இல்லை.  எக்ஸைலின் ஒரே ஒரு அத்தியாயத்தை இரண்டு வாரங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பியானோ … Read more

ரசித்துப் படித்த கட்டுரை

மிகுந்த ராணுவ ஒழுங்குடன் அமைந்திருந்த என் தினசரி வாழ்க்கை கடந்த ஒரு மாதமாக ஹிப்பிகளின் வாழ்வு போல் அமைந்து விட்டது.  தியானம் இல்லை.  வாரம் இரண்டு முறை அப்யங்கம் இல்லை.  வாரம் ஒரு முறை ரெமி மார்ட்டின் இல்லை.  கடிதங்களுக்கு பதில் எழுதவில்லை.  இரவில் முறையான நேரத்தில் உறங்கப் போவதில்லை.  உலகக் கால்பந்தாட்டம் காரணம் இல்லை.  மிகச் சில ஆட்டங்களையே பார்க்கிறேன்.  இந்த ஒழுங்கற்ற தினசரி வாழ்வுக்குக் காரணம், எக்ஸைல் தான்.  1600 பக்கங்களில் 1300 பக்கங்களை … Read more