படித்ததில் பிடித்தது (2)
திமிங்கிலம் குறித்த சமஸின் கட்டுரையில் (17 ஜூலை) தூவி, வலசை என்ற இரண்டு வார்த்தைகள் வருகின்றன. ”திமிங்கிலத்தின் தூவியே கடலில் ஒரு பாய்மரம் அளவுக்குத் தெரியும்.” தூவி என்பது மயிலின் தோகை, மீனின் சிறகு. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த வார்த்தை வருகிறது. வலசை செல்லுதல் என்றால் புலம் பெயர்தல். பின்வரும் இணைப்பில் நீலத் திமிங்கலங்களின் பாடல்களை காணொளியில் பதிவு செய்திருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=dXOo68SDTdk