வாடிய உயிர்கள்…

பூனைகளுக்கான உணவை நான்கு நண்பர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.  அதுவும் போதாமல் போகும்போது எங்கள் குடியிருப்பு மேனேஜரை அனுப்பி நானே வாங்கிக் கொள்கிறேன்.  இதையெல்லாம் ஒருங்கிணைப்பதற்கே சில மணி நேரம் ஆகி விடுகிறது.  அதுவும் தவிர, அவந்திகா பூனைகளுக்கு உணவு தருவதற்காகக் கீழே செல்லும் போது பக்கத்து அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி தூஷணை வார்த்தைகளால் அவந்திகாவைத் திட்டுகிறார்.  காது கூசும் தூஷணை வார்த்தைகள்.  நம்முடைய குடியிருப்பில் வைத்துக் கொடுப்பதற்கு அவர் ஏன் திட்ட வேண்டும்?  பூனைகளால் ஆஸ்துமா வருமாம்.  அதனால் திட்டுகிறார்.  அவந்திகா பதில் ஒன்றும் சொல்லாமல் சாப்பாடு கொடுத்து விட்டு, மலஜலமெல்லாம் சுத்தம் செய்து விட்டு வந்து விடுவாள்.  மலஜலத்தை சுத்தம் செய்ய பணிப்பெண்கள் முன்வராததால் அவந்திகாவே செய்து விடுகிறாள்.  பத்து மணிக்கு இறங்கிப் போனால் பதினொன்றரைக்கு வருவாள். 

வர வர தூஷணை அதிகமாகிப் போனதால் உணவு கொடுக்கும் இடத்தை மாற்றினாள் அவந்திகா.  இந்தப் புதிய இடத்தில் வாகனங்கள் சீறிப் பாயும் சாந்தோம் நெடுஞ்சாலை என்பதால் பூனைகள் அலைக்கழிகின்றன.  பயம் கொண்டு ஓடி விடுகின்றன.  நேற்று முழுதும் பட்டினி கிடந்திருக்கும்.  பெரும்பாலான மனிதர்கள் தான் மட்டுமே இந்த உலகில் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உணவை ஒருங்கிணைப்பதிலேயே சில மணி நேரம் ஆகி விடுகிறது என்று குறிப்பிட்டேன் அல்லவா?  ஒரு நெருங்கிய நண்பருக்கு பூனை உணவு இன்னின்ன தேவை என்று செய்தி அனுப்பினேன்.  உடனே பதில் வந்து விடும்.  இந்த மாதம் வரவில்லை.  இரண்டு நாட்கள் ஆயிற்று, வரவில்லை.  எனக்கு பயம் ஆகி விட்டது.  பொதுவாக உதவி கேட்டு பதில் இல்லை என்றால் விட்டு விடுவேன்.  அதற்குப் பிறகு ஒரு மெஸேஜ் கூட செய்ய மாட்டேன்.  சொன்ன விஷயத்தையே ஒரு தடவைக்கு மேல் சொல்வது எனக்குப் பிடிக்காது.  ஆனாலும் பயமாகி விட்டதால் “எல்லாம் நலம்தானே?” என்று இரண்டாவது மெஸேஜும் கொடுத்தேன்.  “உடல், மனம் எல்லாம் நலம்.  ஆனால் ஏப்ரல் இறுதியில் ஒரு ஆண்டு முழுவதும் செய்ய வேண்டிய வேலை குவிந்து விடும்.  அது மட்டும் இல்லாமல் கோவிட் துயர்தீர்க்கும் பிரிவின் தலைவராக வேறு போட்டு விட்டார்கள்.  ஒரு நாளில் இருபது மணி நேரம் வேலை செய்கிறேன்.  இந்த வாரத்துக்குள் பூனை உணவுக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்று விரிவாக மெஸேஜ் அனுப்பினார்.  அவருடைய வேலை அப்படி.  இன்னொரு நெருங்கிய நண்பரிடமிருந்தும் என் மெஸேஜுக்கு பதில் இல்லை.  நான் மீண்டும் ஒரு மெஸேஜ் அனுப்பவில்லை.  என்ன காரணம் என்ற யோசனையிலும் மனம் செல்லவில்லை.  மனம் மரத்து விட்டது.

எழுதுவதைத் தவிர நமக்கு இதெல்லாம் தேவையா என்று அடிக்கடி தோன்றுகிறது.  ஏன் நாம் நண்பர்களிடம் போய் உதவி கேட்க வேண்டும்?  அதுவும் இந்த வயதில்? 

நாவலை முடிக்கும் மும்முரத்தில் இருப்பதால் நேர ஒழுங்கு குலைந்து விட்டது.  நேற்று பன்னிரண்டு மணிக்கு உறங்கப் போய் காலை ஆறுக்கு எழுந்தேன்.  பால்கனியைத் திறந்தால் பத்துப் பதினைந்து காகங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன.  ஒரு காகம் என் தோளில்.  வாய் விட்டுப் பேசாத குறை.  உணவு கொடுப்பதற்கு நான் தாமதப் படுத்தி விட்டேனாம்.  கண்கள் கலங்கி விட்டன எனக்கு.  தஞ்சை ப்ரகாஷின் பொறா ஷோக்கு என்ற கதையில் இப்படிப்பட்ட தருணங்கள் உண்டு.  அதில் புறா.  இங்கே காகம். 

பழையபடி உதவிதான்.  முடிந்தால் பூனை உணவு அனுப்புங்கள்.  அல்லது, பணமாக அனுப்பினால் மேனேஜரை விட்டு வாங்கிக் கொள்கிறேன்.

இங்கிருந்து வீடு மாற்றிக் கொண்டு சென்றால், அவந்திகா திரும்பவும் பூனைகளுடனும் காகங்களுடனும் உரையாடாமல் இருந்தால் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கலாம்.  பூனைகளையும் காகங்களையும் கவனித்துக் கொள்ள பலர் இருக்கிறார்கள்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai