அவதூறுக்கு எதிர்வினை (6): பெருந்தேவி

சாரு தமிழின் முதன்மையான பின்நவீனத்துவப் படைப்பாளி. சாருவோ வேறெந்த தமிழ் எழுத்தாளரோ வாசகர்களின் பொருளாதார ஆதரவைக் கோரினாலோ அதில் வாழ்ந்தாலோ அதை எள்ளிப் பேசவோ விமர்சிக்கவோ தமிழ்ப் பொதுச் சமூகத்துக்கு, குறிப்பாக இன்று வரை எந்தத் திரைப்படத்தையும் கலை நுண்ணுர்வுடனும் தனித்துவத்தோடும் எடுக்காத திரையுலகினருக்கு, அதுவும் திரை இயக்குநப் போலிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. ஒருவேளை அந்த இயக்குநர் குறிப்பிட்ட கதாபாத்திர வார்ப்பை எந்த எழுத்தாளரையும் மனதில் வைத்து எடுக்காமல், அவரது உதவியாளர் அவ்விதமாக உளறியிருந்தால், அதை வெளியே பரப்புவது சக எழுத்தாளர்களுக்கோ / பதிப்பாளர்களுக்கோ அழகில்லை. இலக்கியக் கோஷ்டி, குழு விவகாரங்களைத் தாண்டி இது பண்பாடற்ற செயல். இந்தப் பண்பாடற்ற செயல்களைச் செய்பவர்களும் அதற்கு காரணமாக இருந்த கலைப்புலிகளும்தான் வெட்கப்பட வேண்டுமே தவிர, வெட்கப்பட வேண்டியது, வருந்த வேண்டியது எழுத்தாளர் அல்ல.

இதை நேற்றே எழுதியிருக்க வேண்டியது. என் லேப்டாப் இன்னும் சரியாகவில்லை. கடன் வாங்கிப் பதிகிறேன். தயவுசெய்து அநாகரிகமான பின்னூட்டங்களையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் தவிர்க்கவும்.