அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடக தாதா…

அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடக தாதா பற்றி நிறையவே கேள்விப்பட்டேன்.  ராகுல் காந்தியை திணற அடித்தார், இத்யாதி, இத்யாதி.  பிறகு அவருடைய நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன்.  ரவுடித்தனத்தைத் தவிர வேறு எதுவுமே அதில் இல்லை.  பேச்சுத் திறமை இருந்தால் எவனையும் வீழ்த்தி விடலாம் என்ற திமிர் தான் அர்னாபிடம் காணக் கிடைத்தது.  என்னைப் போன்ற ஒரு ஆள் அந்த தாதாவிடம் மாட்டினால் மறுநாளே நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்னை வீழ்த்தி விடுவார் என்று தோன்றியது.  ரவுடித்தனத்தின் மொத்த உருவம்.  ஆனால் எப்பேர்ப்பட்ட தாதாவுக்கும் ஆப்பு வைக்க ஒரு ஆள் வருவார் இல்லையா?  அர்னாப் என்ற ஊடக தாதா திருமுருகன் காந்தி என்ற தமிழரிடம் தோற்றுப் போய் நக்கும் காட்சியை இன்று கண்டேன்.  யூட்யூபில் தேடிப் பார்த்து விடுங்கள்…

Comments are closed.