on this day…

வர்தா புயல் ஓய்ந்து, வீழ்ந்த மரங்களையும் இலை தழைக் குப்பைகளையும் தமிழகம் முழுவதிலிருந்தும் அழைத்துவரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மதியம், நானும் சாருவும் மயிலை Padrino-வில் சாப்பிட்டுவிட்டு அப்பு தெருவுக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தோம். ஒவ்வொரு சாலையிலும் தெருவிலும் போக்குவரத்து நெரிசல்.

வெர்னர் ஹெர்ஸாக் விசாரணையைப் பாராட்டி இருக்கிறாரே என சாருவிடம் கேட்டேன்.

“ஒரு ஐரோப்பியன் இந்தக் குப்பைக் கூளங்களைப் பார்த்து ஆச்சரியப் படலாம். இதல்லவா ஊர் என்று வியக்கலாம். சினிமாவின் auteurs நம் ஊர் ஹிந்திப் பட ஆடல் பாடல்களையும், தமிழ் சினிமாவின் சண்டைக் காட்சிகளையும் விரும்பிப் பார்ப்பார்கள். ஹெர்ஸாக் விசாரணையைப் பாராட்டியதை அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.

ஸ்ரீராம்