பெங்களூர் வாசகர் சந்திப்பு

ஏப்ரல் ஐந்தாம் தேதி பெங்களூர் கிளம்புகிறேன். ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய நான்கு நாள்களில் மாலையிலும் இரவிலும் என்னைச் சந்திக்கலாம். கோரமங்களாவில் தங்கியிருப்பேன். ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு போட்டும் யாரும் சந்திப்பதாக எழுதவில்லை. ஜாலியாக இருக்கிறது. சென்ற முறை வந்த நண்பர்கள் எனக்காக அவித்த பனங்கிழங்கு, எலந்த வடை போன்ற அரிய விஷயங்களை எடுத்து வந்தார்கள். அதை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முறை அந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன், அந்த நண்பர்கள் மீண்டும் வந்தால். சந்திப்பை மாலை நான்கு மணிக்கு மேல் வைத்துக் கொள்வோம். காலையிலேயே வந்து விடாதீர்கள். நான் என் வீட்டில்தான் ராணுவ ஒழுங்குடன் வாழ்கிறேன். வெளியூர் வருவது ஓய்வு எடுப்பதற்காகவும் பப்புக்குப் போய் டான்ஸ் ஆடுவதற்காகவும் நண்பர்களைச் சந்திப்பதற்காகவும்தான்.

சந்திக்க விரும்புவோர் எனக்கு எழுதலாம்.

charu.nivedita.india@gmail.com