வாசகர் சந்திப்பு

சுமார் ஒரு மாதம் முன்பு அந்தியூருக்கு அருகில் உள்ள ஈரட்டி என்ற மலை வாசஸ்தலத்தில் இருக்கும் பங்களாவில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த  நண்பர்களைச் சந்தித்தேன்.  திட்டமிடாத சந்திப்பு என்பதால் அதிக நண்பர்களை சந்திக்க முடியவில்லை.  இப்போது திட்டமிட்டு ஒரு சந்திப்பு.  வரும் சனிக்கிழமை மாலை.  நான்கு மணியிலிருந்து நள்ளிரவு வரை பேசலாம்.  Transgressive fiction பற்றி உரையாடலாம், விவாதிக்கலாம்  என்று எண்ணுகிறேன்.   இடம்:   எழுமாத்தூர் அருகே மண்கரடு லிங்காத்தாள் குட்டை செல்லும் வழியில் தி.வி.எஸ் விச்வம் தோட்டம்.  தொடர்புக்கு 98427 98935. நேற்று ஈரோடு புத்தகத் திருவிழா சென்றிருந்தேன்.  சென்னையை விட நன்றாக இருந்தது.  இன்று மாலை வந்தாலும் வருவேன்.