ஒரு முக்கியமான இலக்கியக் கூட்டம்

விருட்சம் அழகிய சிங்கரின் பின்வரும் அறிவிப்பைக் காணவும்.  அவசியம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.  பொதுவாக நான் பேசும் கூட்டங்களில் நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஒருவர் கூட கலந்து கொள்வதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன். டாக்டர் ஸ்ரீராம் விதிவிலக்கு; தவிர சென்னை புத்தக விழாவில் நான் பேசிய போது கருப்பசாமி இருந்தார்.   இந்த ஆகஸ்ட் 15 கூட்டத்தையும் நீங்கள் முழுமையாகப் புறக்கணித்தால் வாசகர் வட்டம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் பேசும் போது இரவு பத்து ஆகி விடுகிறது.  எல்லோரும் போய் விடுகிறார்கள்.  எனவே இந்தக் கூட்டத்தில் நான் பேசுவதை நீங்கள் முழுமையாகக் கேட்கவும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.  மச்சினி வந்துருந்தா சாருவர முடியாமப் போச்சு என்று சொல்பவர்களை என் டயரியில் குறித்து வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 15

‘இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் சாருநிவேதிதா பேசுகிறார்

இடம்:   அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி            15.08.2015 (சனிக்கிழமை)

நேரம்           மாலை 5 மணிக்கு*

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

* வழக்கம்போல் 6 மணிக்கு அல்லாமல, 5 மணிக்கே கூட்டம் ஆரம்பம் ஆகிறது.