விழா பதிவுகள் – 3

நேற்றைய விழா அரங்கத்துக்கு வெளியே ஐந்தரை மணிக்கே துவங்கி விட்டது.  சுமாராக 800 பேர் வந்திருந்தனர்.  நூறு பேர் விழா துவங்குவதற்கு முன்பே கிளம்பி விட்டனர்.  குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வந்திருந்த 800 பேரில் 700 பேர் கீழே உள்ள புகைப்படத்தில் காண்பதைப் போன்ற இளைஞர்கள்தான்.  என் எழுத்தை யார் வாசிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சாட்சி.  நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் எடுத்த புகைப்படம்.  (விழா பேனரைக் காணோமே, இது செட்டப் செய்து எடுத்த படமா என்று கேட்பார்கள் எதிரிகள்.  அதைக் கொஞ்சம் யோசித்திருக்கலாம் ஜெகா!