விழா பதிவுகள் – 25

பூர்ண சந்திரன் முகநூலில்:

கேசரி வடை போண்டா என இனிப்பாகவும் காரசாரமாகவும் ஆரம்பித்தது விழா.

அரங்கம் நிறைந்த கூட்டம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தினையும் கொடுத்தது.

இறையன்பு அவர்கள் அடுத்தடுத்த விழாக்கள் இருப்பதாக சற்று முன்னதாக வந்து வாழ்த்திவிட்டு போனார்.

இறையன்பு 1

இறையன்பு 2

இறையன்பு 3

புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்

சமஸ்,திருப்பூர் கிருஷ்ணன்,லெனின் சிறப்பாக பேசினர்.

மனுஷ், பல்கலைக்கழகங்களில் பாடநூலாக சிறந்த இலக்கிய புத்தகங்களை சேர்க்கவேண்டும் என்று குறிபிட்டதற்கு, சாரு இப்போதைக்கு நடக்காது, நீங்க கல்வி மந்திரி ஆகி இதச் செய்ய்யனும் என்றார். மேலும் சாருவின் பேச்சினூடே வந்த அரசியல் பகடி செம்ம.

கிழக்கு பதிப்பகம் பத்ரி உரை சிறப்பு. படைப்பாளிகளுக்காக பதிப்பகங்கள் என்ன செய்தன, என்ன செய்யவேண்டும், எழுத்தை ஊக்கப்படுத்த, சிறந்த எழுத்துக்களை வாசிப்பாளர்களிடத்திலே கொண்டு சேர்க்க வேண்டியது பற்றி பேசி ஒரு சிறப்பான துவக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்.

சாருவின் பேச்சு அதகளம், முக்கியமாக அதிகாரத்தை உடைத்தல் என்ற உரை…