நாளை காலை பத்தரை மணிக்கு…

நாளை (19-6-2016) காலை பத்தரை மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச இருக்கிறேன்.  இது போன்ற செய்திகளை சாருஆன்லைனில் இனிமேல் வெளியிடுவதில்லை என்று இருக்கிறேன்.  யாரும் வருவதில்லை.  அதுதான் காரணம்.  ஆனாலும் இப்போது எழுதுவது ஏன் என்றால், பொதுவாக என் பேச்சை விடியோ எடுத்து பலரும் கேட்கும்படி செய்வது ஷ்ருதி டிவி. அவர்களுக்கு நான் முன்கூட்டியே சொல்லாததால் அவர்கள் வேறொரு கூட்டத்துக்குப் போகிறார்கள்.  கூட்டத்துக்கு வர முடியாதவர்களும் என் பேச்சைக் கேட்கும் பொருட்டு யாரேனும் நண்பர்கள் ஆடியோ அல்லது விடியோ பதிவைச் செய்ய முடியுமா?  அதற்கு ஆகும் செலவைக் கொடுத்து விடலாம்.  பலரும் பயன் பெற வேண்டுமே என்ற ஆர்வத்தால் எழுதுகிறேன்…

charu.nivedita.india@gmail.com