வாழ்த்துக்கள்

உப்பு நாய்களுக்கே கிடைத்திருக்க வேண்டும்.  கொஞ்சம் தாமதமாகி விட்டது.  கானகன் நாவலைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரை மணி நேரம் அந்த நூலின் வெளியீட்டு விழாவில் (என்று நினைக்கிறேன்) பேசினேன்.  அப்போதே இது போன்ற விருதுகள் லக்ஷ்மி சரவணகுமாருக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.  இப்போது கானகன் நாவலுக்கு யுவ புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.  பலரும் திட்டுவார்கள்.  எழுத்தாளனைக் கழுமரத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அந்தத் திட்டுகளையே வாழ்த்தாக ஏற்க வேண்டும்படி லக்ஷ்மி சரவணகுமாரைக் கேட்டுக் கொள்கிறேன்…

விருது என்பது எழுத்தாளனின் பயணத்தில் ஒரு சிறிய அங்கீகாரம்.  லக்ஷ்மி சரவணகுமாருக்கு என் வாழ்த்துக்கள்…