தேகம் – நூல் விவாத நிகழ்வு – இன்று மாலை

தேகம் - கூட்டம்

 

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

வடசென்னை, திருவொற்றியூர் பகுதியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நண்பர்களின் முன்முயற்சியில், ‘மாற்றுக்களம்’ என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக சமஸின் ‘கடல்’, மற்றும் சாரு நிவேதிதாவின் ‘தேகம்’ நாவலை முன்வைத்து ச. வெங்கடேஷ் மற்றும் சாரு சக்தி முறையே பேசுகிறார்கள். புத்தக வாசிப்பையும், உரையாடலையும் தொடங்குவோம். புத்தக வாசிப்பை இயக்கமாக மாற்றுவோம். புத்தக வாசிப்பே ஒரு மனிதனை, முழுமையான மனிதனாக மாற்றுகிறது. வாய்ப்புள்ள தோழர்களை கலந்துக் கொள்ளும்படி அழைக்கின்றோம்.

நாள்: 5.11.2016. சனிக்கிழமை, நேரம்: மாலை 6 மணி அளவில், தோழர் சோலை அவர்களின் இல்லம், தேரடி அருகில், திருவொற்றியூர், சென்னை

– ஏ. சண்முகானந்தம், ஆசிரியர், ‘காடு’