ஆதித்தாயின் முதல் கதை

சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கிக்கும் எனக்கும் உள்ள பல ஒற்றுமைகளில் ஒன்று – எங்களைப் பொறுத்தவரை கதை, கட்டுரை, கவிதை என எல்லாமே ஒன்றுதான்.  கதை கட்டுரையாக இருக்கும்; கட்டுரை கதையாக வரும்; எல்லாவற்றிலுமே கவிதை ஊடாடிக் கிடக்கும்.  தற்சமயம் வரம்பு மீறிய பிரதிகள் என்ற என்னுடைய பழைய நூலை மறு பிரசுரத்துக்காக வேண்டி பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தபோது பின்வரும் பகுதியைக் கண்டு திகைத்துப் போனேன்.  காரணம், இது கட்டுரைத் தொகுதியில் இருக்கிறது.  1999-ஆம் ஆண்டு எழுதியது.  வாஸ்தவத்தில் இது என்னுடைய கவிதைத் தொகுதியில் வர வேண்டியது.  படித்துப் பாருங்கள்:

மாற்றுருவின் வெளியாக மாறிய பெண்ணின் உடல்வெளி

தானே பின்னிய புதிர்வெளிப் பாதையில் சிக்குண்டு கிடக்கும் சிலந்தி

இருட்குகையில் ஆதிச் சித்திரங்களாய் பதிந்து கிடக்கும் மான்

எண்ணற்ற ரகசியங்களையும் மர்மங்களையும் கொண்டிருந்தது அந்த வனம்

அருவியின் ஒலி இதோ அருகாமையில் கேட்கிறது

கண்ணுக்குப் புலப்படவில்லை

காணாத தூரத்திலிருந்து பளிச்சிடுகின்றன விலங்குகளின் கண்கள்

உயரத்திலிருந்து தரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் விருட்சம்

ஆயிரக்கணக்கில் உடைந்து சிதறிய ஆகாயம்

சர்ப்பங்களின் கலவிப் பிழம்புகள்

வாயுத்துகள் உருடையுள் செல்லும் காலடித் தடங்கள்

ஒருவரையொருவர் கொன்றும் தின்னும் கதை சொல்லும் வரலாற்றின் முற்றுப் பெறாத சுவடிகள்

பாழ்வெளியில் தனது விரல்களால் காற்றை இசைத்துக் கொண்டிருக்கும் எருமைத்தலை தொன்ம மனிதன்

சிலுவையைச் சுமந்து அலையும் கறுப்பு அடிமை

கற்பாறைகளைப் புணரும் கடல்கன்னிகள்

ஜனன உறுப்புகளை அறுத்தும் கிழித்தும் எறியும் பாதிரிகளும் கன்னிகாஸ்த்ரீகளும்

மொக்கு அவிழ்த்து நட்சத்திரங்களைப் பரப்பும் மலர்ப் பக்கங்கள்

குருதி துளிர்க்கும் சிறுமியின் கழுத்து

ஆயிரம் பெண்களின் ரத்த வாடை வீசும் அரண்மனைத் தடாகங்கள்

கோழியைப் புணரும் இளைஞன்

தனது தாயின் ஜனன உறுப்பை ஊசியால் தைத்துக் கொண்டிருக்கும் பெண்

அலையலையாய் சுருள்கிறது கதைசொல்லியின் சொல்வளையம்

நட்சத்திர வெளியில் மிதக்கும் துப்பாக்கி

துப்பாக்கிக் குழல் வழியே ஒழுகும் விந்து

நிணம் உருகி வழியும் சொற்சிதைவுகள்

சமுத்திரத்தின் ஆழத்தில் இணைதேடி அலையும் துறவி

பனிமலையில் பதிந்த காலடித்தடங்கள்

ஆயுதங்களைப் புணர மறுத்தவனின் உடல் சொற்களாய் சிதைவுறுகிறது

கருந்துளைக் கணத்தை கவிதையில் முயன்று தற்கொலை செய்து கொள்கிறான் கவி

யுகத்தின் பாடலை கிதாரில் இசைத்துக் கொண்டிருக்கிறான் கவியின் நண்பன்

சாக்கடையில் விழுந்து கிடக்கிறது கடவுளின் முற்றுப் பெறாத கவிதை

வானத்தைத் தொடும் கட்டிடங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிதைந்து கிடக்க ஆயிரம் பெண்களின் வயலின் இழைவுகள்

முன்பின் பக்கங்கள் இல்லாத காலச்சுவடியிலிருந்து பாடலை இசைக்கிறான் கவிக்குள்ளன்

சிலுவையால் சுயமைதுனம் செய்து கொண்டிருக்கும் பதுமை

மூங்கிலால் ஹராகிரி செய்து கொள்ளும் வீரன்

இறுதிப் பேரழிவின் வெறுமையை முதல் வேட்டையில் தேடி துக்கமடையும் போராளி

நியாயவாதியின் எல்லையற்ற தனிமை

தன் குழந்தைகளைக் கொன்று வீழ்த்திக் கொண்டிருக்கும் தாய் தன் நூறாயிரம் பிம்பங்களைக் கண்டு போதம் இழக்கிறாள்

 

தனது முதல் கதையை இப்படியாகச் சொல்லத் துவங்குகிறாள் ஆதித்தாய்

1999

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai