கலைஞனும் சமூகமும்… (2)

ஜெ. பிரச்சினை பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.  யாருக்கும் பதில் சொல்லவில்லை.  காரணம், நான் எழுதியிருந்ததை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  அப்படிப்பட்டவர்களோடு என்னால் மல்லுக்கு நிற்க முடியாது.  பொதுவாக தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிக்காத சமூகம்.  நடிகர்களாக இருந்தால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள்.  காதையும் நாக்கையும் அறுத்துப் போடுவார்கள்.  எழுத்தாளர்களையும் அப்படி வழிபடுங்கள் என்று சொல்லவில்லை.  அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.  ஆசான்களை அவமதிக்கும் சமூகம் இது.  தி.ஜ.ர. ஒரு மகான்.  ஆனால் அவர் புகைப்படத்தை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?  சிறைக் கைதிகளைப் போல் நம்பர் எழுதிய ஒரு சிலேட்டைப் பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் மட்டுமே நம்மிடம் உள்ளது.  குடிசை மாற்று வாரியத்தில் அவருக்கு ஒரு வீடு இலவசமாகக் கொடுத்த போது எடுத்த புகைப்படம் அது.  அதுதான் எழுத்தாளனுக்கு தமிழ்ச் சமூகம் கொடுக்கும் மரியாதை.  நான் ஏன் தாதாக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை உற்ற நண்பர்களாக வைத்திருக்கிறேன் தெரியுமா?  ஜெயமோகனையாவது அந்த பெண்மணி மீது மாவை விட்டு எறிந்தார் என்ற அளவோடு விட்டுவிட்டார்கள்.  இதுவே நானாக இருந்தால், இவன் அவரைக் கையைப் பிடித்து இழுத்தான் என்று கதை கட்டியிருப்பார்கள்.  உடனடியாக தருண் தேஜ்பாலை பிஜேபி எப்படிப் பழி வாங்கியதோ அது போல் இங்கேயும் மோடி ஆதரவாளர்கள் களத்தில் இறங்குவார்கள்.  அதற்கு தீமூகாகாரரும் சேர்ந்து உதவி செய்வார்.  பழைய பகையை பின்னே எப்படித் தீர்த்துக் கொள்வது?  ஆத்தீமூக்கா?  அவர்களுக்கு சாரு என்றால் யார் என்றே தெரியாது, பாவம், விட்டு விடுவோம்.  இதனாலெல்லாம்தான் நான் எந்த வம்புக்கும் போவதில்லை.

கேரளத்தில் அய்யப்பன் என்று ஒரு கவி இருந்தார்.  புகழ்பெற்ற கவி.  சாலையோரம்தான் அவர் இருப்பிடம்.  மதுபான விடுதி அவரது கவிஸ்தலம்.  ஒருமுறை அவர் கேரளத்தின் பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி அவர் என் காதலி என்றார்.  அந்தப் பெண்மணிக்குக் கணவரும் குழந்தைகளும் உண்டு.  குடும்பம் உண்டு.  ஊடகங்கள் உடனே அந்தப் பெண்மணியைத் தொடர்பு கொண்டு, அய்யப்பன் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று அதிர்ச்சியுடன் கேட்க, அந்தப் பெண்மணி, கவி அய்யப்பனின் காதலுக்கு நான் அதிர்ஷ்டம் அல்லவா செய்திருக்க வேண்டும்?  ஆம், எங்களுக்குள் ஆழ்ந்த காதல் உண்டு என்று சொல்லி விட்டார்.  அப்போதும் விடவில்லை ஊடகங்கள்.  பெண்மணியின் கணவரைத் தொடர்பு கொண்டார்கள்.  அவரோ “ஆமாம், அவர்கள் காதல் எனக்குத் தெரியுமே?  அதில் உங்களுக்கென்ன பிரச்சினை?” என்று மூஞ்சியில் அடித்தாற்போல் சொல்லி விட்டார்.  இதெல்லாம் அச்சு ஊடகங்களில் மட்டும் அல்ல; விடியோவாகவே வந்தன.  காதல் என்றால் செக்ஸ் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் சராசரிகளுக்கும் அய்யப்பனுக்கும் வெகுதூரம் இருந்ததை அய்யப்பனின் கவிதை அறிந்தோர் அறிவர்.  அய்யப்பன் என் உற்ற நண்பர்.  இப்போது உயிருடன் இல்லை.  அவருடன் நான் கழித்த மதுபானக் கவிதை இரவுகளையும் பகல் பொழுதுகளையும் என்றுமே மறக்கவியலாது. 

மம்முட்டியிடம் என்னை சிலர் அறிமுகப்படுத்திய போது அவருடைய உடல் மொழி எப்படி இருந்தது என்பதை என்னால் எழுத்தில் விவரிக்க முடியாது.  அப்படி ஒரு பவ்யம்.  உங்கள் கட்டுரைகளை மாத்யமம் பத்திரிகையில் படித்திருக்கிறேன் என்று சொல்லி, ஓரிரு கட்டுரைகளைப் பற்றி விவாதிக்கவும் செய்தார். 

இதற்கு மேல் இந்த விஷயம் பற்றி எழுத மாட்டேன். 

***

ராஸ லீலா கலெக்டிபிள் பிரதிகளுக்குச் சற்றே பொறுக்க வேண்டும்.  ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் டெடிகேஷன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  எழுதிக் கொடுத்து விட்டு மாச்சு பிச்சு போய் விடுவேன்.  ஆனால் அதன் பிழை திருத்தம்?  அதைத் திரும்பி வந்துதான் செய்ய வேண்டும்.   ஜூலை வரை ஆகும்.  அது வரை இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai