நேர் கொண்ட பார்வை – வினோபன் தியாகலிங்கம்


மருத்துனின் வாழ்வில் ஒரு கடினமான காலம் என்பது அவந்து இண்டேர்ன்ஷிப் காலம் தான்…சூரியன் உதிக்குமுன்னர் வார்டுக்கு சென்று சூரியன் மறைந்த பிறகு தான் எமது குவார்ட்டர்சுக்கு வரலாம்…கிட்டத்தட்ட சொல்லதானால் ஆசான் Charu Nivedita எழுதிய ராசலீலாவில் வரும் ஸ்டெனோ கண்ணாயிரம் பெருமாளின் வாழ்க்கை..அந்த வாழ்க்கையை வாழ்வதை விட இறந்துவிடலாம் எனத்தோன்றும்…ஒருமாதிரியாக அந்த ஒருவருடத்தை முடித்து RHOஆக புரொமோட் ஆகி NHSL vascular surgery unit க்கு மாற்றலாகி இருந்தேன்..

அந்த யூனிட்டில் நான் மட்டுமே ஒரு சின்னப்பெடியன்..எல்லோரும் வயது வந்தவர்கள்,சிங்களவர்கள்……நான் மட்டும் கடைக்குட்டி…எனக்கோ அப்பொழுது தான் இண்டேர்ஷிப் முடித்து வந்திருந்தமையால் அப்பொழுதும் நான் ஒரு இண்டேர் எனும் நினைப்பு தான் இருக்கும்…ஒருநாள் drug company ஒன்றை சேர்ந்த மெடிகல் ரெப்புகள் எம்மை சந்தித்தார்கள்…

வரிக்கோஸ் நாளச்சிகிற்சை சம்மந்தமாக சிம்போசியம் நடத்தப்போகிறோம்..வாருங்கள் என அழைப்பு கொடுத்தார்கள்..என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை…நானும் most junior doctor என்பதால் அவர்கள் என்னை கண்டுகொள்ளவில்லை என என்ணி விட்டுவிட்டேன்…அப்பொழுது அந்த வார்ட் நர்சிங் ஆபிசர் என்னிடம் ஏதோ கேக்க நானும் ஏதோ கொச்சை சிங்கலத்தில் பதில் சொல்ல அந்த மெடிக்கல் ரெப் டீமில் இருந்த ஒரு முஸ்லிம் பையன் கண்டுவிட்டான்..

டாக்டர் தமிழா?

ஆமா..எப்படிக்கண்டுபித்தீர்கள்?

நீ பேசின கொச்சை சிங்களம் போதாதா என கூறியிருக்கவேண்டியவர் நான் வைத்தியன் எனும் மரியாதையால் இல்லை உங்கள் முகத்தை பார்க்க தெரிகிறது என நாகரீகமாக கூறினான்…

டொக்டர் நீங்கள் சிம்போசியம் வாறிங்க தானே என கேட்டான்…நான் இப்பொழுது தான் யூனிட்டுக்கு வந்திருக்கிறேன்,,யாரும் கூப்பிடவில்லை என்றேன்..உடனே ஒரு அழைப்பிதழில் எனது பெயரை எழுதி தந்துவிட்டு சென்றான்..

கல்கிசை எனும் இடம் என்பதாக நினைக்கிறேன்..ஒரு ஹாலில் அந்த சிம்போசியம் நடக்கிறது…வரிக்கோஸ் நாள வியாதிக்கான EVLA எனும் லேசர் சிகிற்சை சம்மந்தமாக நடத்தியிருந்தார்கள்..அது முடிந்தது எம்மை இரவு உணவுக்காக ஒரு beach resort ஒன்றுக்கு கூட்டிசென்றார்கள்…ஏற்கனவே எமக்கான மேசை இருக்கைகள் எல்லாம் ரிசர்வ் செய்யப்பட்டு விட்டதால் பிரச்சனை இல்லமல் இருந்து உணவை அருந்த தொடங்கினோம்…எல்லோரும் சிங்கள வைத்தியர்கள் என்பதால் நான் அந்த முஸ்லிம் மெடிகல் ரெப்புடன் இருந்து உணவை பதம் பார்த்துக்கொண்டிருந்தேன்…உணவின் சுவையே தனி..இது ஒரு மெடிக்கல் டின்னர் என்றபடியால் wine கூட இல்லை…

அங்கே வெள்ளையினத்தவர்கள் தான் அதிகமாக இருந்தார்கள்..நம் இனத்தவர்ளும் அங்கே இருந்தார்கள்..ஆண்கள் பெண்கள் என…பெண்களை பார்த்து மிரண்டுவிட்டேன்..திரைப்படங்களில் மட்டும் கவர்ச்சியாக பொஷ் ஆக ஆடை அணிவதை பார்த்த எனக்கு அதை நியத்தில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது…மது அருந்தினார்கள்…சிகரெட் புகைத்தார்கள்….ஆண்களும் பெண்களும் ஒன்றாக நடனமாடினார்கள்…எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது,,,

அதை கண்டுகொண்ட அந்த மெடிக்கல் ரெப் கூறினான்..டாக்டர்..இது தான் show-by-oo bub…இங்கே வெள்ளி சனி கிழமைகளில் கூட்டம் அள்ளும்..இப்படித்தான் எல்லாரும் வருவார்கள்..மது அருந்துவார்கள்…டான்ஸ் பண்ணுவார்கள்..

நான் கேட்டேன் அப்படியானால் இந்த பப் தான் இந்த பெண்களை சப்பிளை செய்கிரதா என..அவன் சிரித்தவாறே சொன்னான் நீங்கள் கூறுவது night club.அங்கே தான் பெண்களை சப்பிளை செய்வார்கள்..இது பப்..நீங்கள் வழமியாக உணவருந்தும் ஒரு ரெஸ்ராரெண்ட் போல….இங்கே யாரும் தப்பு தண்டா செய்யமுடியாது..செய்தால் பவுன்சர்கள் எனும் அயானபாகுவான குண்டர்கள் பெயர்த்துவிடுவார்கள் என்றான்..

ஆண்கள் வரும் போது தமது பெண்நண்பிகளை கூட்டி வருவார்கள்…டீஜே க்கு ஆடுவார்கள்…பின்னர் சென்றுவிடுவார்கள்….அங்கே யாரும் சிங்களத்தில் பேசவில்லை..பொஷ் ஆன ஆங்கிலத்திலே பேனினார்கள்..அப்போ விளங்கிச்சு பார்ட்டி எல்லாம் ஹைகிளாஸ்…வயது கூட உயர்தரம் படிக்கும் பெண்களின் வயதை ஒத்தது போல இருந்திச்சு..

நான் அவனிடம் கேட்டேன் அப்போ இவர்களால் எப்படி நள்ளிரவைத்தாண்டி வீடு செல்ல முடிகிரது என்று..அவன் என் அறியாமை எண்ணி மனதினுள் சிரித்துவிட்டு சொன்னான் இவர்கள் யரும் வீட்டில் இருப்பவர்கள் அல்ல..கணவன் மனைவியும் அல்ல…ஜஸ்ட் நண்பர்கள்..திருமணம் செய்யும் எண்ணம் உடையவன் இப்படி தன் மனைவியை அரையும் குறையுமாக ஆட அனுமதிக்கமாட்டான் தானே டக்டர்…

பெண்களும் மேற்படிப்பு படிக்க ஹாஸ்டலில் அல்லது பார்டிங்கில் இருப்பவர்கள்..அல்லது ஏற்கனவே உயர்தர ஹாட்டல் ஒன்றை புக் செய்துவிட்டு தான் வந்திருப்பார்கள்…என்வே பெற்றோரின் பிரச்சனை வராது என்றான்… இவர்களுக்கான முழு பண ஸ்பான்சரும் ஆண்கள் தான்..உடை முதல் ட்ராவல் வரை…
அந்த இடம் பணக்காரர்கள் மட்டும் பழகும் இடம்…மிகவும் பொஷ் ஆக இருந்தது..ஆனால் அந்த இடத்தில் இருக்கும் ஒருவனுக்கு அந்த அழகான மேக்கப் போட்ட பெண்களையும் அவர்களின் உடைகளையும் அந்த இசைக்கு தவறான எண்ணம் வருவது is not uncommon…spaiens have some chemical mediators called hormons…..அதை யாரும் மறக்க கூடாது..ஆனாலும் பப்பில் இருப்பவன் ஜஸ்ட் பெண்களை லுக்கு விட்டுவிட்டு சென்றுவிடுவான்

நான் மனதில் நினைத்தேன் ஆணும் பெண்ணும் எப்போதும் சமம்…நான் புரியாணி சாப்பிட்டுவிட்டு பெண்ணை சாப்பிடாதே என்பது முட்டாள் தனம்…பெண்கள் மது அருந்துவதோ ஆண் நண்பர்களுடன் நடனம் ஆடுவதோ 100% தவறான விடயமே அல்ல..பெண்கள் ஒன்றும் ரோபோட் இல்லையே…இரத்தமும் சதையும் கொண்ட என்னைப்போல ஒரு ஜீவன் தானே..

ஒரு A joke கூறினால் அதை புரியாதது போல நடித்து கமுக்கமாக இருப்பதோ ஒரு நல்ல இசையை கேட்கையில் அதற்கு நடனமாட ஆசை இருந்தும் தன்னை அடக்கி வைத்திருக்கவேண்டும் எனவோ தனக்கு பிடித்த ஆடையை கவர்ச்சியாக அணியக்கூடாது எனவோ ஒரு சட்டமும் இல்லையே,,,தனக்கு பிடித்தைதை செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டு…அதை ஆமோதிக்கும் எம்பதி -empahty மனநிலையை ஆண்கள் வளர்க்க வேண்டும்..

பப்பில் பெண்கள் தமது ஆண்நண்பர்களுடன் ஆடுவதை பார்க்கும் ஏனைய ஆண்கள் மிஞ்சி மிஞ்சி போனால் just flirting உடனான ஒரு பார்வை மட்டுமே செலுத்த முடியும்…அங்கே அத்துமீறுவது எல்லாம் நடக்காத காரியம்..அந்தப்பெண்களும் மது அருந்தி நடனமாடியபின் தங்கள் ஹாஸ்டல்களுக்கு நேராக சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை..காரணம் அந்த ஆண்களும் உயர் வகுப்பு ஆண்கள்..கிட்னாப் செய்து ரேப் ரேஞ்சுக்கு போகமாட்டார்கள்..

ஆனால் அந்தப்பெண் அவனுடன் தனியாக ஒரு ஹாட்டலுக்கு ரூம் போட்டு சென்றால் அது அவனுக்கு மிகப்பெரிய சிக்னல்…பெண்கள் நோ என்றால் நோ என்பது தான் மீனிங் என்பது எப்பொழுதும் நடைமுறைச்சாத்தியம் கிடையாது…ரூம் மட்டும் சென்ற பெண் நோ கூறினால் யார் தான் கேட்பார்கள்…அதுகும் இருவரும் under the influence of alcohol இல் இருக்கையில் ஆண் கேட்பானா…தான் சொல்லுவதை அந்த ஆண் கேட்பான் என எண்ணும் பெண் எவ்வளவு முட்டாளாக இருப்பாள்…

பப்பில் ஆடிவிட்டு விடியற்காலை அவனது ரூமுக்கு செல்லும் பெண்ணுக்கு என்ன பாதுகாப்பான எண்ணம் அவன் மீது ஏற்படப்போகிறது?
அவளை அவள் இருப்பிடத்தில் ட்ரொப் செய்யாமல் ஒரு ஓட்டல் அறைக்குள் அழைத்துசெல்லும் ஆண் நல்லவன் என ஒரு 10 வயது பிள்ளை கூட நினைக்காது..அவன் மீது செக்கியூர் ஃபீல் எப்டி வருதுனு தெரில…

நேர் கொண்டபார்வையில் என்னை பொறுத்தவரை தவறு 100% பெண்கள் மீது தான்…பெண்களுக்கு தெரிய வேண்டிய basic விடயம் கூடத்தெரியாமல் போய் செக்சுவல் அசால்ட் என ஆண்மீது கோபப்படுவது என்பது எவ்வளவு நகைப்பான விடயம்…ஆண்கள் எல்லாம் அனுமார்கள்/அய்யப்பன்கள் என இப்பொழுதும் பெண்கள் நினைக்கிறார்களா?அது தெரியாமல் தான் செல்கிறார்களா?
ஆனால் படத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு அருமை…no means no எனும் கான்செப்டும் அருமை..ஆனால் ஆல்ககோல் பாவித்துவிட்டு நோ மீன்ஸ் நோ தான் என்பதை alcohol influence இல் உள்ள அந்த ஆண் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் நினைப்பு பெண்களுக்கு இருந்தால் அதை இனி குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்து விடுங்கள்…..
வினோபன் தியாகலிங்கம்