தஞ்சை ப்ரகாஷ்: ஒரு கடிதமும் ஒரு சின்ன பதிலும்…

தமிழ்நாட்டில் வாழ வெட்கப்படுகிறேன், தமிழில் எழுதுவது காதில்லாதோர் உலகில் சங்கீதம் பாடுவது போல என்றெல்லாம் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால், புலி துரத்தி வரும் போது படுகுழியில் விழுந்து மரக்கிளையில் தொத்திக் கொண்டிருக்கும் ஒருவனின் வாயில் விழும் தேன் துளியைப் போல் இப்படியும் சில கடிதங்கள் வருகின்றன. என் அன்பு நண்பர் தக்ஷிணாமூர்த்தியின் கடிதம் பின்வருவது. தக்ஷிணாமூர்த்தி கார்ப்பெண்ட்டராகப் பணிபுரிகிறார். கடிதம்:

சாரு சார்
பவுன்ட்லெஸ் அண்ட் பேர் பத்தி ஏற்கனவே சொன்னிங்கன்னுட்டு ஸீரோ டிக்ரீ போய் தேடிட்டுஇருந்தேன் அப்ப ஒரு மேடம் வந்து என்ன தேடறீங்கன்னு கேட்டாங்க நான் பவுண்ட்லெஸ் அண்ட் பேர்னு சொன்னேன். அந்த புக் இன்னும் வர்லனு சொல்டாங்க. இப்ப போய் வாங்கிட்றேன். ஆனா எனக்கு இங்லீஸ் தெரியாதே.

மூர்த்தியின் கடிதத்துக்கு நான் என்ன பதில் எழுதினேன் தெரியுமா? “வேண்டாம் மூர்த்தி; நீங்கள் வாங்காதீர்கள்.”

எனவே நீங்கள் வாங்குங்கள்…

https://tinyurl.com/thanjaiprakash