சமூக விரோதிகள்…

நான் பிராமினாப் பிறந்ததைப் பெருமையா நினைக்கிறேன்; பிராமினுக்கு புத்தி அதிகம்; க்ஷத்ரியாளுக்கு உடல் வலிமை அதிகம் என்று சொன்ன ஒய்ஜி மகேந்திரன் மகளை பிராமண நண்பர்கள் காறித்துப்பி இருக்க வேண்டும். செய்யவில்லை. வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அப்படிக் காறித் துப்பாவிட்டால் பிராமண துவேஷம் அதிகமாகிக் கொண்டேதான் போகும். ஒரு கட்டத்தில் பெரியார் சொன்ன மாதிரி, பாம்பையும் பாப்பானையும் கண்டா பாம்பை விட்டு விட்டு பாப்பானை அடி என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. நான் எந்த சாதியையும் ஆதரிப்பவன் இல்லை. இங்கே இப்போது பிராமண துவேஷம் அதிகமாகி இருக்கிறது. அதேபோல் தலித்துகள் மீதான துவேஷமும் அதிகமாகி இருக்கிறது. இந்துக்கள் மீது முஸ்லீகளுக்கும் முஸ்லீம் மீது இந்துவுக்கும் துவேஷம் அதிகமாகி இருக்கிறது. முன்பெல்லாம் ரம்ஸான் போது எனக்கு ரம்ஸான் தின்பண்டமும் பக்ரீத் போது பிரியாணியும் வரும். இப்போது கிராண்ட் ஸ்வீட்ஸில் மைசூர் பாகு வாங்கிக் கொடுக்கிறார்கள். என்னவென்று விசாரித்தால் இந்து நண்பர்களுக்கு நம் வீட்டுப் பண்டங்களைக் கொடுக்கலாகாது என்று மத குருமார்கள் அறிவுறுத்துவதாகச் சொல்கிறார்கள். அவர்களைப் பகைத்துக் கொள்ள முடியுமா என்று பாவமாகக் கேட்கிறார்கள் முஸ்லீம் நண்பர்கள்.

ஆரம்பித்த விஷயத்துக்கு வருகிறேன். மேட்டுக்குடி பிராமணர்கள் சமூகத்தில் ஜாதித் துவேஷத்தை வளர்க்கிறார்கள். பிராமணனுக்கு புத்தி ஜாஸ்தி, மற்றவனுக்கு புத்தி கம்மி, நாய்களிடையேயும் சாதி இருக்கிறது என்றெல்லாம் விஷத்தைப் பரப்புகிறார்கள். ஒய்ஜி மகேந்திரனின் மகளை சாதி வெறியைப் பரப்புகிறார் என்று சொல்லி கைது செய்ய வேண்டும். தயவுசெய்து சமூக ஆர்வலர்கள் இதற்கான சட்ட நடவடிக்கை எடுங்கள். குஷ்புவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தை நூற்றுக் கணக்கான வழக்கு போட்டது. இப்போது இந்த பிராமண முட்டாளையும் சும்மா விடக் கூடாது. இதை கூடிய மட்டும் ஷேர் செய்யுங்கள். இந்த முட்டாளின் மீது பிராமணர்கள்தான் கேஸ் போட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடும் முப்பதுகளின் ஜெர்மனி போல் ஆகி விடும். அதற்கான வேலையைத்தான் ஒய்ஜிமகேந்திரன் மகள் மாதிரி சமூக விரோதிகள் செய்கிறார்கள்.