மாபெரும் சவால்…

இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது.

ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை.

இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை பெரும்பான்மையானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் மைஆத்தர்ஸ்.காம் என்கிற வலைத்தளம்.

எழுத்தாளராகிய தாங்கள் எப்படி இதில் பதிவு செய்துகொண்டு உங்களது புத்தகங்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும் என்பதை அறிந்துக் கொள்ள என்னோடு தொடர்பு கொள்ளவும்.

மேற்கண்ட அறிவிப்பை/தகவலை என் நண்பரும் பதிப்பகத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான ஒளிவண்ணன் எனக்கு அனுப்பியிருக்கிறார்.

நண்பர் ஒளிவண்ணன், நீங்கள் பாலாவின் நான் கடவுள் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போல்தான் இருக்கிறோம் தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள்.  இதில் ஒன்றிரண்டு பேர் சினிமாவில் வசனம் எழுதுவதால் இந்தப் பிச்சைக் கூட்டத்திலிருந்து விலகி விட்டார்கள்.  மற்றவர்களெல்லாம் அப்படியேதான் இருக்கிறோம்.  இதற்குக் காரணம், புத்தகங்களின் விற்பனை என்று மட்டுமே சொல்ல மாட்டேன்.  உலகம் பூராவுமே பல எழுத்தாளர்களின் நூல்கள் ஆயிரம் ரெண்டாயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பதில்லை.  ஆனாலும் அவர்கள் எப்படி தமிழ் எழுத்தாளர்களைப் போல் பிச்சைக்காரர்களாக இல்லை என்றால், அவர்களுக்கு வேறு விதங்களில் பணம் வருகிறது.  கேரளத்தை எடுத்துக் கொண்டால், பல பத்திரிகைகளில் அவர்களை ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு மாத ஊதியம் கொடுக்கிறார்கள்.  என்னுடைய நண்பர் ஒருவர் இரண்டு பத்திரிகைகளில் ஆலோசகராக இருக்கிறார்.  சன்மானம், ஒரு பத்திரிகைக்கு ஒன்றரை லட்சம்.  ஐயோ, ரெண்டு பத்திரிகைகளில் வேலை செய்வது கஷ்டமாயிற்றே என்றேன்.  ஆமாம், கஷ்டம்தான் என்றவர், ஆனால் ஒன்றும் பிரச்சினையில்லை; தேதியை மாற்றிக் கொள்ளச் சொல்லி விடுவேன் என்றார்.  எனக்குப் புரியவில்லை.  நண்பர் விளக்கினார்.  மாதம் ஒருமுறையோ ரெண்டு முறையோ மீட்டிங் என்று சொல்லி மாலை எட்டு மணிக்கு அழைப்பார்கள்.  குடி பார்ட்டிதான் மீட்டிங்.  இரண்டு பத்திரிகைகளிலும் ஒரே நாளில் கூப்பிட்டு விட்டால் கஷ்டம் இல்லையா, அதனால் இரண்டாவதாக அழைக்கும் பத்திரிகையிடம் நாளை வைத்துக் கொள்ளச் சொல்லுவேன்.  அவ்ளோதான்.

அவ்வளவுதான் வேலையா?

அவ்வளவுதான். 

இதுக்கா அவ்வளவு பெரிய சன்மானம்?

சகோதரரே, என்னுடைய பெயரை நான் அந்தப் பத்திரிகைக்குத் தருகிறேன் இல்லையா?  என் பெயர் என்ன சாதாரணமா?  40 ஆண்டுகள் எழுதிச் சம்பாதித்த பெயர் ஆயிற்றே?

இந்தப் பெயரால் பத்திரிகையில் ஒரு பிரதியாவது அதிகமாகுமா?

ம்ஹும்.  அதிகமாகாது.  ஆனால் அந்தப் பத்திரிகையின் மதிப்பு உயரும். 

தமிழில் ஞாநிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.  எனக்கும் கிட்டியது.  ஆனால் காகித விலை உயர்வினால் அது அற்பாயுசில் முடிந்து விட்டது.  இப்படி பல வகைகளில் எழுத்தாளர்களுக்குப் பணம் கிடைக்கிறது.  தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நடப்பதில்லை.  வருகை தரும் பேராசிரியராக பல எழுத்தாளர்கள் பெரிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகிறார்கள்.  அந்த வாய்ப்பும் தமிழ்நாட்டில் கிடையாது. 

இந்த நிலையில் நீங்கள் எழுத்தாளர்களையே நீங்கள் புத்தகங்களை விற்கவும் சொல்கிறீர்கள்.  பின்வரும் வாக்கியங்கள் உங்களுடையது:

இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது.

ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை.

இதை விட ஒரு எழுத்தாளன் பிராத்தல் நடத்தலாம் ஒளிவண்ணன்.  கோபிக்காதீர்கள்.  உங்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் நிலை தெரியுமா, தெரியாதா?  எத்தனை எழுத்தாளர்கள் பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள் என்ற கதை உங்களுக்குத் தெரியுமா?  அவர்களைப் போய் அவர்களின் புத்தகங்களையும் விற்கச் சொல்கிறீர்களா?  எனக்கு ஒரு ஆண்டு ராயல்டி ஒன்றரை லட்சம் ரூபாய் வருகிறது.  மாத வருமானம் எவ்வளவு?  12,500 ரூ.  ஒரு இஸ்திரி போடுபவரின் சம்பளம் கூட இதை விட அதிகம்.  ஒரு கார் டிரைவரின் சம்பளம் கூட இதை விட அதிகம்.  ஒரு ஆட்டோ டிரைவரின் சம்பளம் கூட இதை விட அதிகம்.  தெருவில் நின்று தன் உடம்பை விற்கும் கடைநிலை விபச்சாரியின் மாத வருமானம் இதை விட அதிகம்.  நான் யார்?  தமிழின் மிகப் பிரபலமான மூன்று எழுத்தாளர்களில் ஒருவன். 

இப்போது நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?  உங்களை அணுகினால் என் புத்தகங்களை இன்னும் அதிகம் விற்க ஆலோசனை சொல்வீர்கள்.  ஒளிவண்ணன், நீங்கள் அல்ல, உங்களைப் படைத்த ஆண்டவனே வந்தாலும் புத்தக விற்பனையை அதிகரிக்க முடியாது.  முன்பெல்லாம், 1200 பிரதிகள் அச்சடிப்பார்கள்.  அதில் 200 பிரதிகளை புத்தக மதிப்புரைக்குக் கொடுப்பார்கள்.  இப்போது அச்சடிப்பதே 200 பிரதிதான்.  உங்களை அணுகி அலோசனை கேட்டால் இந்த 200 பிரதிகள் 210 ஆக உயரும் இல்லையா? ஆக, அதன்படி என் ராயல்டியும் 12500 இலிருந்து 12750 ஆக உயரலாம்.  ஏனென்றால், நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள் ஒளிவண்ணன்.  இப்போதைய தேவை என்னவென்றால், தமிழ் எழுத்தாளர்கள் ஐரோப்பிய மொழிகளில் – குறிப்பாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் – மொழிபெயர்க்கப்பட வேண்டும்.  இன்னொரு கொடுமை, அப்படி மொழிபெயர்க்கப்பட்டும் அந்நூல்களை ஐரோப்பாவில் கொண்டு சேர்க்க ஆள் இல்லை.  எங்கே விற்பனை?  செக்ஸ் ஒர்க்கர் என்றால் ஐரோப்பியத் தெருக்களில் நிற்கலாம்?  நான் மார்ஜினல் மேன் புத்தகங்களை வைத்துக் கொண்டு லண்டன் தெருக்களில் நிற்க முடியுமா?  லண்டனில் ஒரு outlet வேண்டும்.  அதற்கு மாதம் ரெண்டு லட்சம் ரூபாய் செலவாகும்.  என்ன செய்ய ஒளிவண்ணன்? 

நீங்கள் இப்படிப்பட்ட திட்டங்கள் போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  ஆனால் அதை எனக்கு அனுப்பி வைத்திருக்கக் கூடாது.  மற்றபடி நாம் எப்போதும் இனிய நண்பர்களாகவே இருப்போம்.  மேலும் ஒரு வேண்டுகோள்.  என்னை மீண்டும் தொடர்பு கொண்டு தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க வேண்டாம்.  அதைக் கேட்கும் பொறுமை எனக்கு இல்லை.  மேலும், ஸாரியும் சொல்ல வேண்டாம்.  என் தரப்பை உங்களுக்கு விளக்கினேன்.  அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டாம்.  அப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும். 

ஏற்கனவே அவலத்தில் வாழும் எழுத்தாளர்களை மேலும் மேலும் அவலத்தில் தள்ள வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai