தேர்தல் முடிவுக் கணிப்பு…

நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  இந்தியா குட்டிச்சுவர் ஆனதற்குக் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்பதால் காங்கிரஸ் மீது வெறுப்பு உண்டு.  அவ்வளவுதான்.  ஒரு மொழிபெயர்ப்பு வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் ஒரு வாரமாக தினசரிகள் பார்க்கவில்லை.  இன்று மதியம் நான்கு வட இந்திய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வர இருப்பதாக அறிந்தேன்.  நான்கு மாநிலங்களிலும் பி.ஜே.பி. வரலாறு காணாத வெற்றியை அடையும் என்பது என் தேர்தல் முடிவுக் கணிப்பு.  இதுவரை என் கணிப்புகள் பொய்த்தது இல்லை.  அதேபோல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவார்.  இந்த வெற்றி எப்படி இருக்கும் என்றால், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நேரு எப்படிப்பட்ட வெற்றியை அடைந்தாரோ அப்படிப்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை அடைவார்.  என்னைத் திட்டாதீர்கள்.  நான் சொல்வது கணிப்பு.  அவ்வளவுதான்.  இந்தக் கணிப்புக்குப் பல தர்க்கரீதியான, விஞ்ஞானரீதியான காரணங்கள் உள்ளன.  அதை எழுத இப்போது எனக்கு நேரம் இல்லை…