எழுபத்தைந்து பிரம்படி பட்ட எழுத்தாளன்

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஏகப்பட்ட கடிதங்கள் திக்குமுக்காடச் செய்து விட்டன. இனிமேல் எழுத்தாளன் அனாதை என்று சொல்ல மாட்டேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2006-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஃப்ரான்ஸில் உள்ள துலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் லூர்து என்ற சிறிய கிராமத்தில் உள்ள பெர்னத் அன்னையின் எதிரே மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததை ஒருபோதும் மறக்க இயலாது.

கீழே உள்ள கட்டுரை என்னுடைய புதிய தொகுப்பான கலையும் போலியும் என்ற புத்தகத்தில் உள்ளது. புத்தக விழாவின் போது வெளிவந்து விடும். பெருமாள் முருகன் பிரச்சினையின்போது எழுதியது. அதெல்லாம்தான் பழைய கதையாக ஆகி விட்டதே, இப்போது எதற்கு அதெல்லாம் என்றார் சிநேகிதி. நான் எதைப் பற்றி எழுதினாலும் என் எழுத்துக்கு expiry date இல்லையே அம்மா என்றேன். பின்வரும் பகுதியைப் பார்த்தால் அது உங்களுக்கே புரியும். எதைப் பற்றி எழுதினாலும் அது எனக்கு ஒரு தோது. அவ்வளவுதான். அதை முன்வைத்து நான் சொல்ல வந்ததை சொல்லிச் செல்வேன்.

மிக மும்முரமாக சில புத்தகங்களுக்குப் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். எனவே என்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என யாரும் சம்சயம் கொள்ள வேண்டாம். 18 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறேன். முடிந்தவர்கள் சந்தா அனுப்புங்கள். இன்னொரு முக்கியமான பயணம் காத்திருக்கிறது. வீசா கிடைத்ததும் தகவல் சொல்கிறேன்.

***

நம்முடைய பூகோள அறிவு அமெரிக்கா, ஐரோப்பா என்ற இரண்டு கண்டங்களோடு – அதிலும் ஒருசில பிரபலமான நாடுகளோடு சுருங்கிவிடுகிறது. மிகப் பழமையான பாரம்பரியம் உள்ள நாடுகளைப் பற்றிக்கூட நாம் கவனிப்பதில்லை. கணினி யுகத்தில் இந்த உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி விட்ட பிறகும் இதுவரை நம் கவனத்துக்கு வராத பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள், அவர்களின் கலாச்சாரம், இலக்கியம், இசை, உணவு போன்ற விஷயங்களைக் குறித்து படிப்பதையும் கேட்பதையும் என் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் தஜீகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாடு பற்றி சில ஆய்வுகள் செய்தேன். ஆஃப்கனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ள தஜீகிஸ்தான் 93 சதவிகிதம் மலைகளால் சூழப்பட்ட நாடு. மக்கள் தொகை வெறும் 80 லட்சம். ஆசியாவின் மிக நீண்ட சாலைகளில் ஒன்றான பாமிர் நெடுஞ்சாலை இங்கேதான் உள்ளது. இந்தியாவைப் போன்ற மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட தஜீகிஸ்தான் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு சுதந்திர நாடாகியது. 

இப்படி தஜீகிஸ்தான் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோதுதான் என் ஜெர்மன் நண்பன் லார்ஸ், சத்ருதீன் அய்னி (Sadriddin Ayni) என்ற தஜீக் எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்தான். சத்ருதீன் அய்னி 1878-இல் பிறந்து 1954-இல் காலமானார். அவரது 24-ஆவது வயதில் தஜீகிஸ்தானை ஆட்சி செய்த அமீர் அப்துல்லாஹ், அய்னியை அரசவைக் கவிஞராக இருக்கும்படி அழைத்தார். ஆனால் அய்னி அதை மறுத்து விட்டு, வசிக்க ஒரு வீடு இல்லாமல் மதறஸாக்களில் படுத்து உறங்கினார். பிறகு ஒரு பள்ளி ஆசிரியராக நவீன கல்விமுறையைப் புகுத்தினார். அதன் காரணமாக தலைநகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டார். 1910-ஆம் ஆண்டு – அவரது 32-ஆவது வயதில் தலைமறைவாக இருந்துகொண்டே நவீன கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தி தானே கற்பிக்கவும் செய்தார். 

தொடர்ந்து அமீர்களின் கொடுங்கோன்மைகளைப் பற்றி மிக விரிவான புனைகதைகளை எழுதினார் அய்னி. அதனால் அலிம்கானின் போலீஸால் கைது செய்யப்பட்ட அய்னி, அர்க் என்ற ஊரில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருநாள் அவருக்கு 75 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. ஒரு மனிதன் 75 பிரம்படிகள் வாங்கினால் இறந்துவிடுவான். அய்னியும் அந்தப் பிரம்படிகளோடு இறந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் தஜீகிஸ்தான் தலைநகரம் சோவியத் படைகளிடம் வீழ்ச்சி அடைந்ததால் எல்லா கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள். 75 பிரம்படிகளை வாங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த அய்னியை சோவியத் வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. அன்றைய தினம் 1917, ஏப்ரல் 9-ஆம் தேதி.  

அய்னி பிரம்படிபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

1917, ஏப்ரல் 25-ஆம் தேதி மிர்ஸா நஸ்ருல்லா என்பவர் காலமானார். அவர் அய்னியோடு சிறையில் இருந்தவர். அய்னியைப் போலவே 75 பிரம்படிகள் வாங்கியவர்.

அதன் பிறகு சோவியத் ஆட்சிக் காலத்தில் தஜீக் மொழிக்கு அய்னி புதிய எழுத்துக்களை உருவாக்கினார். மக்ஸீம் கார்க்கியின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அழைத்ததும், “எழுத்தாளன் இறந்துவிட்டான்” என்று பத்திரிகைகளில் அறிக்கை விடும் எழுத்தாளர்கள் மிகுந்த நம் தமிழ்ச் சூழலில் அய்னி போன்ற எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai