உணவு என்ற மதம்

என்னுடைய எல்லா நண்பர்களையும் விட எனக்கு ஏன் அராத்துவைப் பிடிக்கிறது?

என் வாழ்க்கைக்கு இப்போதைய நிலையில் பணம்தான் பிரதான தேவையாக இருக்கிறது. அதுவும் என்னுடைய அத்தியாவசியத் தேவை கருதி அல்ல. இரண்டு காரணங்களுக்காக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. ஒன்று, பயணம். இரண்டு, பூனை உணவு. என் அன்றாட வாழ்வை விட இந்த இரண்டு விஷயங்களும் எனக்கு முக்கியம் என்பதால் பணத்தின் முக்கியத்துவம் அதிகமாகிறது. ஆனால் அராத்து எனக்கு இதுவரை ஒரு பைசா கொடுத்ததில்லை. (அவரிடம் இல்லை; அதனால் கொடுக்கவில்லை என்பது வேறு சப்ஜெக்ட்). ஆஹா, சமன்பாடு எங்கேயோ தவறுகிறது அல்லவா? என் வாழ்க்கையின் ஆக முக்கியமான விஷயங்களான பயணம், பூனை ஆகியவற்றுக்குத் தேவையான பணத்தை எனக்குக் கொடுப்பவர்களைத்தானே எனக்கு எல்லோரையும் விட அதிகமாகப் பிடிக்க வேண்டும்? அதுதான் இல்லை.

உணவு எனக்கு மதம். சென்னையோ நல்ல சுவையான உணவுக்கு எதிரி. மேலும், அவந்திகாவைப் போல் அசைவம் சமைக்கும் ஆளை, உணவகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. அவந்திகா அவ்விஷயத்தில் ஒரு மெஜீஷியன். அவள் ஒரு தீவிர சைவக்காரி. அய்யங்கார். ஆனாலும் மணத்தை வைத்தே எப்படி இப்படி சமைக்கிறாள்? திண்டுக்கல் பிரியாணி, மதுரையின் பல்வேறு உணவகங்கள், விளக்குத் தூண் மெஸ், குமார் மெஸ்… ம்ஹும்… எதுவுமே அவந்திகாவின் நிழலைக் கூடத் தொட முடியாது. விரால் மீனாகட்டும், வஞ்சிரமாகட்டும், மத்தி மீன், கவலா(ங்) மீன், சுறா, திருக்கை, சிவப்பு சங்கரா, கணவா, காலா, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வகை மீன்கள், நண்டு, றால்… சொல்லி மாளாது. அவள் கை பட்டால் அப்படி ஒரு ருசி. ஆனால் அதற்காக அநியாயமாக மெனக்கெடவும் செய்வாள். என்னென்னவோ பொடிகளைப் போட்டு மீனை marinate செய்வாள். மூன்று மணி நேரம் மசாலாவில் மீன் ஊற வேண்டும். முன்பெல்லாம் அம்மியில் மசாலா அரைப்பாள். இப்போது மிக்ஸியில்.

ஆனால் திடீர் திடீரென்று குசினிக்கு விடுமுறை விட்டு விடுவாள். அந்த நேரங்களில் எனக்கு ஸ்விக்கி மிகப் பெரும் உதவியாக இருந்தது. ஆனாலும் அவளிடம் சொல்வேன், உன் சமையலுக்கு ஹெச் ப்ளஸ் (நூற்றுக்கு நூற்றிப் பத்து) என்றால் இந்த சமையலுக்கெல்லாம் பத்து மதிப்பெண் தான் கொடுக்கலாம் என்று. அந்த அளவுக்குக் கேவலமாக இருக்கும். something fishy என்று ஒரு உணவகம். ஸ்விக்கியின் மூலம் ஆர்டர் செய்தேன். வவ்வால் வறுவல். வீட்டில் ரசம் இருந்தது. சிறிய அளவிலான ஒரே ஒரு வறுத்த வவ்வால் 300 ரூ. விலை கிடக்கட்டும். அதிர்ச்சி என்னவென்றால், கெட்டுப் போன மீனை வறுத்திருக்கிறார்கள். நிச்சயம் மூன்று தினங்களுக்கு முன்னால் அதைக் குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும். கையை வைத்தால் கொழகொழ என்று வந்தது. இத்தனைக்கும் அந்தக் கடை என் வீட்டுக்கு மிக அருகில் உள்ளது. என் வீட்டிலிருந்தும் அந்தக் கடையிலிருந்தும் ஐந்து நிமிட தூரத்தில் கடல்.

இந்த நிலையில் ஒருநாள் அராத்து Savoury Sea Shell என்ற கடையிலிருந்து ஸ்விக்கி மூலம் நண்டு புரட்டியது ஆர்டர் செய்தார். புரட்டியது என்றால் குழம்பாகவும் இருக்காது. வறுத்ததாகவும் இருக்காது. semi gravyயாக இருக்கும். அவந்திகா செய்தது போல் இருந்தது. அப்பாடா, இந்த 66 வயதில் அவளுக்கு இணையான ஒரு chefஐக் கண்டு பிடித்தாயிற்று!

ஆனால் பெருமாளே! இவ்வளவு ருசியான அசைவ சமையலை எனக்கு சமைத்துக் கொடுப்பதும் ஒரு அய்யங்கார் பெண். அதற்கு இணையாக, அதே சுவையில் அமைந்த ஒரு கடையை எனக்கு அறிமுகப்படுத்தவும் ஒரு அய்யங்காரா? இதெல்லாம் உமக்கே அநியாயமாகத் தெரியவில்லையா?

நல்லவேளை, இந்த அய்யங்கார்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு இஸ்ரேல் மாதிரி ஒரு தனி நாட்டை உருவாக்கவில்லை. உருவாக்கியிருந்தால் முதல் ஆளாக நான் தான் போய் குடியுரிமை கேட்டிருப்பேன். ஆனால் non-ayyangarsக்குக் குடியுரிமை தருவார்களோ?

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai