கொரோனா சிந்தனைகள் – 1

இத்தனை தினங்களாக பெரும் கவலையில் இருந்தேன். நாகேஸ்வர ராவ் பூங்கா மூடப்பட்டு விட்டதால் அங்கே வசித்த பத்து பூனைகளும் எப்படி சாப்பிடும் என்பதே கவலை. அவைகளுக்கு வேட்டையாடத் தெரியாது என்பதால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். பார்க்கோ ஒரு மாதம் பூட்டிக் கிடக்கும். ஒரு மாதம் பட்டினி என்றால் சாவுதான். இங்கே உள்ளவர்களோ பிராமணர்கள். அவர்கள் அந்தப் பூனைகளுக்கு காலையும் மாலையும் உணவு கொடுப்பவர்கள். பிராமணர்கள் பொதுவாக சட்டத்தை மீறும் பழக்கம் இல்லாதவர்கள். ரௌத்திரம் பழகாதவர்கள். செக்யூரிட்டியோ இப்போதுதான் சட்டம் பேசுவார். அவர் இப்போதுதான் போலீஸ் கமிஷனராக மாறுவார். அவரை மீறி பிராமணர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களே என்பதுதான் என் மனக்கவலைக்குக் காரணம். ஆனால் பூனை ஆர்வலர் பிரகாஷ் வித்தியாசமான பிராமணர். மல்யுத்த வீரன் மாதிரி இருப்பார். பூனை குறுக்கே போகிறது என்று சொல்லி ஒரு கர்ப்பிணிப் பூனையை காலால் உதைத்த ஒரு ஆளை அடித்து வீழ்த்தியவர் பிரகாஷ். அடித்த ஒரே அடியில் அந்த ஆள் மூர்ச்சையாகி விழுந்து விட்டான். பத்து நிமிடம் ஆனதாம் பிரக்ஞை வர.

இன்று பிரகாஷ் போன் செய்தார். தினந்தோறும் உள்ளே போய் பூனைகளுக்கு உணவு கொடுக்கிறாராம்.  நிம்மதி ஆயிற்று.  இன்றுதான் போக முடியாது; என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அழுதார்.  பரவாயில்லை, ஒருநாளில் ஒன்றும் ஆகி விடாது என்று ஆறுதல் சொன்னேன்.

சரி, எனக்கு இன்னொரு சந்தேகம்.  இங்கே சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள வாட்ச்மேன்கள் நெடுந்தொலைவில் இருந்து வேலைக்கு வருபவர்கள்.  பக்கத்தில் அம்மா உணவகம் இருந்தால் அங்கேதான் சாப்பாடு.  இல்லாவிட்டால் தள்ளுவண்டியில் கிடைக்கும் இருபது ரூபாய் சாப்பாடு. இன்று பந்த் என்பதால் அவர்கள் எங்கே சாப்பிடுவார்கள்? அரசியல் கட்சிகளின் பந்த் என்றால் அம்மா உணவகம் திறந்திருக்கும்.  ஆனால் கொரோனா அரசியல் கட்சிகளை விட சக்தி வாய்ந்ததாகத் தெரிவதால் இன்று அம்மா உணவகம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.  எங்கள் வீட்டில் காலை பதினோரு மணிக்குத்தான் காலை உணவு.  எப்போதும்.  லஞ்ச் மூன்றரை.  இதற்காகவே நான் காலையில் வாக்கிங் போவதை நிறுத்துவது இல்லை.  ஆனால் ஏப்ரல் பத்தாம் தேதி வரை வாக்கிங் போக வேண்டாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா.  பூங்காக்கள் எல்லாம் மூடிவிட்டபடியால் கடற்கரைக்குப் போகலாம் என்று இருந்தேன்.  மொட்டை மாடியிலேயே போய்க் கொள் என்பது அவந்திகாவின் யோசனை.  யோசனை என்ன யோசனை?  உத்தரவு மாதிரிதான்.  அதனால் மொட்டைமாடியில் வாக்கிங் போய்க் கொண்டு வீட்டிலேயே தோசை போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  நான் காலை எட்டுக்கே சாப்பிட்டு விடும் ஆள்.  நேற்றோடு தோசை மாவு தீர்ந்து விட்டது.  கடையில் போய் மாவு வாங்கி வரக் கூடாது என்பது அவந்திகாவின் ’யோசனை’.  அதனால் இன்று காலையில் சாப்பிட ஒன்றுமில்லாமல் ஒரு முள்ளங்கி, ஒரு வெள்ளரிக்காய், ரெண்டு தக்காளி, ஒரு வெங்காயம் எல்லாவற்றையும் நறுக்கி கால் எலுமிச்சையையும் (தோலோடு) நறுக்கிப் போட்டு சாப்பிட்டேன்.  வழக்கம்போல் பதினோரு மணி காலை உணவுக்கு இன்று அவல் உப்புமா செய்து கொடுத்தாள் அவந்திகா.  செக்யூரிட்டி ஃப்ரான்ஸிஸைக் கேட்டபோது காலையிலிருந்து டீ கூட குடிக்கவில்லை என்றார்.  அவருக்கும் காலை உணவு கொடுத்தாள்.  மதிய உணவுக்கு என்ன செய்வார் என்று தெரியவில்லை.  எங்கள் வீட்டில் தயாராக மூன்றரை மணி ஆகும்.  மற்ற சென்னை வாட்ச்மேன்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.  இன்று அம்மா உணவகம் உண்டா?

கீழ்த்தளத்தில் உள்ள பூனைகளுக்கு உணவு கொடுப்பதற்காகக் கீழே போனேன்.  பதினைந்து நிமிடம் நின்றேன்.  சாந்தோம் நெடுஞ்சாலையைப் பார்த்தேன்.  கடைகள் உணவு விடுதிகள் எல்லாம் மூடியிருந்தன. எல்லாமே நிசப்தமாக இருந்தது.  ஆனால் சாலையில் நிமிடத்துக்கு இரண்டு ஸ்கூட்டர்கள் பைக்குகள் சென்றன.  அவ்வப்போது கார்களும் சென்றன. 

பூனை உணவு தீர்ந்து விட்டது.  முடிந்தவர்கள் பூனை உணவு ஆர்டர் செய்யலாம்.  அல்லது எனக்கு எழுதலாம்.  Whiskas dry cat food.  Ocean fish.  Or any other sea food.  சிக்கன் வேண்டாம்.  Whiskas Dry cat food Adult or Kitten. 

charu.nivedita.india@gmail.com

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai