பூச்சி 61

மது விற்பனைக்குத் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வெற்றியும் பெற்ற ஃபாஸிஸ்டுகள் இப்போது நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவார்களா?  உச்சநீதி மன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்று சொல்லி விட்டது.  எங்கேயாவது ஒரு நாகரீகமான சமூகத்தில் மதுக்கடைகளை மூடச் சொல்லி நீதிமன்றத்தில் தடை வாங்குவார்களா?  இதைச் செய்தவர்களில் ஒருவர் சினிமா உலகில் புத்திஜீவி என்று கருதப்படும் கமல்ஹாசன்.  இவர்கள் அதற்கு சொன்ன காரணம், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையில் குடிகாரர்களெல்லாம் கூட்டமாகக் கூடுகிறார்கள் என்பது.  ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் எந்த இடத்தில்தான் கூட்டம் இல்லை?  கோவில் திருவிழாக்கள் வழக்கம் போல் நடந்தன.  காய்கறிக் கடைகளில் தேர்த் திருவிழா போல் கூட்டம்.  அங்கெல்லாம் கூட்டமாக இருக்கிறது என்று நீதிமன்றத்தின் மூலம் நிறுத்துவார்களா?  மது என்பதை ஒழுக்கம் சம்பந்தப்பட்டதாகப் பார்க்கும் மனநோய் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது.  அதனால் மது அருந்தும் பழக்கம் உள்ள கமல்ஹாசனே டாஸ்மாக்குக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.  உயர்நீதி மன்றமும் வெகுஜன மனோபாவத்துக்கு ஏற்ப கடைகளை மூடித் தீர்ப்பு சொல்லி விட்டது.  அவர்களுக்கே தெரிந்திருக்கும், இது உச்சநீதிமன்றத்தில் செல்லாது என்று. 

அதிகாரப் பரவல் பற்றி கடற்கரை சிறுகதை பற்றிய என்னுடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.  மைய அரசு மாநிலங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்லி பின்நவீனத்துவக் கோட்பாட்டுக்கும் இதற்குமான தொடர்பு பற்றி விளக்கினேன்.  ஆனால் தமிழ்நாட்டுக்கு மைய அரசு கூடுதல் அதிகாரத்தைக் கொடுத்தால், இப்போது உச்சநீதி மன்றம் செய்ததைப் போல் நியாயத்தை நிலைநாட்டி இருக்க முடியாது.  தமிழ்நாடும் ஒரு தாலிபான் அரசாக மாறிப் போயிருக்கும்.

மதுபானத்துக்குத் தடை கோரினால் நாளை மாட்டுக் கறிக்கும் ஒருவர் தடை கோரலாம்; பூண்டு வெங்காயம் சாப்பிடக் கூடாது என்று தடை கோரலாம்; ஒருத்தர் சிகரெட்டுக்குத் தடை கோரலாம்; எனவே உடல்நலத்துக்குக் கேடு என்று சொல்லி மதுவுக்குத் தடை கோருவதெல்லாம் கடைந்தெடுத்த ஃபாஸிஸம்.  என்ன செய்யலாம் என்றால், மற்ற மாநிலங்களில் கொடுப்பது போல் நல்ல மதுவை, கலப்படம் செய்யாத மதுவை விற்கலாம்.  பொதுவாகவே தமிழ்நாட்டில் மது அருந்தாதவர்களின் அராஜகம் தாங்க முடியாததாக இருக்கிறது.  நீங்கள் குடிக்கா விட்டால் அது உங்கள் விருப்பம்.  மற்றவனைக் குடிக்கக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  அது அடுத்தவனின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயல் என்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை? 

***

நான் பலமுறை கூறியது போல, ஃபாஸிஸத்தின் முக்கியக் கூறு, survival of the fittest.  அந்த வகையில் இந்தியாவில் வாழத் தகுதியானவர்கள் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும், சம்பளம் பற்றியே கவலையில்லாத மேட்டுக்குடியும்தான்.  அவர்கள்தான் தொடர்ந்து லாக்டவுனை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  லாக் டவுனைத் தவிர கொரோனாவிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடியதுதான்.  ஆனால் அன்றாடங்காய்ச்சிகள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு என்ன பண்ணுவார்கள்?  தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும் தினக்கூலிகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தங்கள் கிராமத்துக்கும் நடைப் பயணமாகவும், சைக்கிள் ரிக்‌ஷாவிலும் செல்ல ஆரம்பித்தார்கள்.  ஒரு முதிய பெண்மணி தன் நாயை தன் தலைச்சுமையின் மேலே நிற்க வைத்துக் கொண்டு செல்கிறாள்.  கால் விளங்காதவர்களைத் தங்கள் தோளில் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் உற்றார் உறவினர்.  சிறு குழந்தைகளும் தங்கள் அப்பனின் தோளில் உட்கார்ந்திருக்கின்றன.  மாட்டு வண்டியில் ஒரு மாட்டை விற்று விட்டதால் அந்த மாட்டுக்குப் பதிலாக ஒரு ஆள் தன் குடும்பத்தையும் சாமான் சட்டிகளையும் இழுத்துக் கொண்டு போகிறான்.  45 டிகிரி செல்ஷியஸில் காயும் கடுமையான கோடை வேறு.  பலருடைய காலில் செருப்பு கூட இல்லாமல் தோலெல்லாம் வெடித்துப் பாளம் பாளமாகிக் கிடக்கின்றன.  பார்க்கவே சகிக்கவில்லை.  விளிம்புநிலை மக்கள் யாருமே லாக்டவுனில் பட்டினி கிடக்கவில்லை என்கிறார் மந்திரி.  நகரத்திலிருந்து தங்கள் கிராமத்துக்கு லாரியில் சென்ற ஒரு கூட்டம் பிணமாகவும் அரை உயிருடனும் சாலையோரத்தில் சிதறிக் கிடக்கிறது.  சாலை விபத்தில் லாரி கவிழ்ந்து விட்டது.  கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களின் கதைகளில் வருவது போல் நிஜமாகவே ஒரு குழந்தை தன் பிணமான அம்மாவின் அருகே அழுதபடி தவழ்ந்து சென்று கொண்டிருக்கிறது.  அது ஒரு காணொலி.  அந்த நெடுஞ்சாலையில் இந்த விபத்தைப் பொருட்படுத்தாமல் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.  இரண்டு கோடி மக்கள் தொகையுள்ள தில்லியில் தினக்கூலிகள் இருபத்தைந்து லட்சம் பேர் இருப்பார்கள்.  இதில் கிராமத்துக்குச் செல்ல முடிவெடுத்தவர்கள் பத்து லட்சம் இருக்கும்.  அவர்களின் கதிதான் மேலே விவரித்தது.  இதுபோல் இந்தியா எங்கும் இருக்கும் நகரங்களிலிருந்து 500 கி.மீ., 1000 கி.மீ. தூரத்தில் இருக்கும் தங்கள் கிராமங்களுக்குக் கிளம்பினார்கள் விளிம்புநிலை மக்கள். 

தென்னிந்தியா மட்டுமே விதிவிலக்காக நின்றது.  குறிப்பாக தமிழகமும் கேரளமும்.  தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களில் உணவு இலவசம்.  எல்லோருக்கும்.  ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சீனி எல்லாம் இலவசம்.  அதனால் இங்கே இருக்கும் வட இந்தியக் கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் கிளம்பவில்லை.  அப்படிக் கிளம்பியிருந்தால் அவர்கள் மரணத்தை மட்டுமே சந்தித்திருக்க முடியும்.  இங்கே இருந்து சத்தீஸ்கரும் பீஹாரும் அஸ்ஸாமும் கிட்டத்திலா இருக்கின்றன?  சென்னையிலிருந்து அஸ்ஸாம் கிட்டத்தட்ட 3000 கி.மீ. 

பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினேன், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்வது பொய் என்று.  ஒடிஸாவின் தலைநகரைப் பார்த்தால் நம் கடலூர் விழுப்புரம் மாதிரி இருக்கிறது.  சாலையெங்கும் ஒரே குண்டும் குழியுமாகக் கிடக்கிறது.  டவுன் பஸ்களைப் பார்த்தால் அதை காயலான்கடைக்காரன் கூட வாங்க அஞ்சுவான்.  அப்படி இருக்கிறது.  நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து “சுதந்திரம் வாங்கிய பிற்பாடு இங்கே அரசாங்கம் என்று ஏதாவது நடந்ததா?” என்று கேட்டேன்.  ஒடிஸாவே இப்படி என்றால், சத்தீஸ்கர் பிஹார் போன்ற மாநிலங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டம். 

நகரத்தையும் நகர மாந்தரையும் பேணிப் பராமரித்துக் கொண்டிருந்த விளிம்புநிலை மக்கள் கூட்டத்தை நகரம் கை விட்டு விட்டது.  மோடிக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை.  தேவ கௌடாவை விட தத்தி.  கௌடாவாவது வெறுமனே தூங்கிக் கொண்டுதான் இருந்தார்.  ஆனால் இதுவோ அபாயகரமான தத்தியாக இருக்கிறது. 

இவர்களெல்லாம் சொந்த ஊர் போய்ச் சேர பேருந்துகளையோ ரயில்களையோ தந்து உதவக் கூடாதா?  தேசத்தில் மனசாட்சி உள்ள அதிகாரிகளே இல்லையா?  புராணங்களிலும் ஆதிகால வரலாறுகளிலும் காவியங்களில் வரும் exodus மாதிரிதான் இருந்தது விளிம்புநிலை மக்களின் இந்தத் துயரமான நடைப் பயணம்.    

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai